ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, September 10, 2011

அண்ணன் செங்கி ஏன் கேட்கிறார்.?



மாவட்டப் பிறை. மண்டலப் பிறை, தத்தம் பகுதிப் பிறை, டவுன் காஜி பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !

அன்றைய தக்லித் ஜமாத்தில் நீங்கள் இருந்தீர்களே அப்போது அது தவறு என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. அதுபோனா போவட்டும். போன ஹஜ்ஜிப் பெருநாளைக்கு ததஜ 17 ஆம் தேதி பிறை கொண்டாடுகிறது என்பதற்காக இதஜடி ஜமாத் இந்தியாவில் எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்த நீங்கள் இன்றைக்கு இந்தியப்பிறையை கண்டு கொள்ளாமல் போனதன் காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்.



_______________________________________________________



* உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் , சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே அவருக்கு பதில் சொல்லுங்கள்.

அட கூமுட்டைகளா! நாங்க மறுக்கா மறுக்கா சொல்லுறோம். சுனாமி கணக்கை ஏ டூ இசட் கையில் வைத்திருந்தது அண்னன் பாக்கர் தான். நாங்கள் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தவில்லை. உங்களின் ஐஸ்குச்சி விரும்பி அப்துல் முஹைமீன் தான் இதை குற்றச்சாட்டாக வைத்து நிறுபிக்க முடியுமா என்று கேட்டான். அதை நிறுபிக்க வேண்டியது அண்ணன் பாக்கரின் பொறுப்பு என்றோம்,. கொடியும் சீருடையும் உணர்வுக்கு 2 லட்சமும் கணக்குக் காட்டியதும் அதற்கு தணிக்கை குழுவில் விளக்கம் தந்ததும் உங்கள் தலைவர் பாக்கர் தான். எனவே இதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். நல்லா இருப்பே நீ செங்கி! தயவு செய்து அதற்கு பதில் கேட்டு சொல்லு. அப்படியே உன் தலைவர்10 லட்ச ரூபாயை மோசடி செய்து தணிக்கைக் குழுக் கணக்கில் அது கிடுக்குப்பிடி போட்டு அவரின் சட்டையைப் பிடித்து வசூல் செய்யப்பட்ட விசயத்தையும் கேட்டுச்சொல்.

_______________________________________________________

* சட்டப்படி எங்கள் பெயரை போஸ்டர் -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கே? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.

பாக்கர் மீடியா வேல்டு என்று போட்டு விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என்று பொடி எழுத்தில் போடுவது அயோக்கியத்தனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேரா அப்துல்லாவிற்காக மட்டுமே நடத்தப்பட்ட சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டது சட்ட விரோதம் தான். பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமாக அவர்கள் தரப்பு விளக்கத்தைத் தான் நாம் வெளியிட்டோம். அதற்கு உங்கள் பதில் என்ன என்று தான் கேட்கிறோம். விளக்கம் சொல்லுங்கள் சகோதரர் சொங்கி.

_______________________________________________________

* இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின் 'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாது, இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் ' என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும், சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும் ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே பின் பற்றாத நீங்கள் அடுத்தவன் பைலா பற்றி பேசுவது வெட்க கேடு! எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·

உன் சைக்கிளில் லைட்டு இல்லை என்று சைக்கிளே இல்லாத ஒருவன் சொன்னானாம். அதுமாதிரி இருக்கிறது உங்க பேச்சி. எங்கடா உங்க பைலான்னு கேட்டா அதுக்கு தர்ர விளக்கமா இது? குர்ஆன் ஹதீஸ் தான் இவர்களின் பைலாவாம்.

அடப்பாவிகளா! அப்பறம் ஏனப்பா உங்க மீடியா வேல்டு ஸ்டால்களில் குர்ஆன் ஹதிஸோடு சகாபாக்களையும் ஒப்புக்கொள்ளும் ஜாக் கூட்டத்தின் பேச்சாளர் கோவை செய்யதுவின் சீடியை விக்கிறீங்க?:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் ஊரில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிவிட்டு வந்த பேரா.அப்துல்லாவின் சீடியை ஏம்பா விக்கிறீங்க? அவரோடு ஏம்பா மாநாடுல கலந்துக்கிறீங்க?

மதஹபுகளை ஏற்றுக்கொள்ளும் ஜாஹீர் நாயக்கின் சீடிக்களை ஏம்பா விக்கிறீங்க?



இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு தங்கச்சிமடம் கிருத்துவ பேராலத்தில் தேர் இழுத்துவிட்டு வந்த வாடிகன் வாத்தியார் ஜவாஹிரின் சீடியை ஏம்பா விக்கிறீங்க?

நீங்கள் சீடி விக்க வேண்டுமானால் நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கூட விற்பீர்கள் என்பதும் நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

_______________________________________________________

* முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?

ஆணையிடத் தயார் என்று சொல்ல வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக முகவைத்தமிழன் உங்களின் நிர்வாகி இல்லை. உங்களுக்கும் அவருக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறோம்.

_______________________________________________________

* யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக் , மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?] யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.

அற்புதம். எல்லா புகழும் இறைவனுக்கே. நாம் இத்தனை காலமும் இதுபற்றி மவுனம் சாதித்து வந்த சொங்கி இப்போது ஒப்புக்கொண்டார். அவர் பத்தாயிரம் ருபாயைத் திருடி அதை ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் சாட்சியின் மூலம் நிறுபித்தது உண்மையா இல்லையா என்று கேட்டோம்,. அதற்கெல்லாம் இன்றுவரை அவர் வாய்திறக்காத காரணத்தால் தான் அவரை ஷரியத் ரூமிற்குள் விட்டு ததஜ நிர்வாகிகள் செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னோம்.

அதற்கு பொங்கி எழுந்த அண்ணன் சொங்கி அவர்கள் என்னையா செருப்பால் அடித்தார்கள்? நான் தான் அந்த இஸ்லாத்தை தழுவியரை அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்தேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நன்றி, மிஸ்டர் சொங்கி. இதை உங்களின் வாயில் இருந்து வரவழைக்கத்தான் நீங்கள் செருப்படி பட்டதாகச் சொன்னோம்,. ததஜவினர் யாரும் இதுபோல யாரிடமும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதும் இல்லை நடந்து கொள்ளவும் மாட்டார்கள்.

அதாவது செங்கி அவர்கள் செய்யது இப்ராஹீமிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு இல்லை என்று சத்தியம் செய்கிறார். பணம் கொடுக்கும் அன்றைக்கு சாட்சியாக இவர்களோடு இருந்த அந்த இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் மூலம் அதை செய்யது இபுராஹீம் நிருபிக்கிறார். ஏண்டா எனக்கு எதிராக சாட்சி சொன்னாய் என்று அந்தச் சகோதரரை அடித்து உதைத்து காயப்படுத்துகிறார் செங்கி. இது தான் நடந்தது. குற்றம் நிறுபிக்கப்பட்டதும் ததஜவில் இருந்து சொங்கி தூக்கி வீசப்படுகிறார். உண்மையை ஒப்புக் கொண்ட செங்கி அவர்களுக்கு மிக்க நன்றி.

_______________________________________________________

* காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த 'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி' இப்போ எங்கே என கேட்டுச் சொல்லுங்கள்!

அந்தச் செய்தியை நமக்கும் காட்டினால் நன்றாக இருக்கும். இதுவரை கண்ணில் விளக்கெண்ணை போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.

ஒரு சினிமாவில் கவுண்டமனியிடம் செந்தில் கேட்பார்

“ஆமா...., அந்த ஊமை வீடு எங்க இருக்கு? வெலாசம் வெலாசம்” என்று அதைப்போல குணவதியின் முகவரியை அண்ணன் செங்கி ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை


http://poyyantj.blogspot.com/2011/08/blog-post_28.html

 

No comments:

Post a Comment