ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Tuesday, October 23, 2012

யார் இந்த பீ.ஜே? - 2


யார் இந்த பீ.ஜே?
பீ.ஜே என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.
1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

யார் இந்த பீ.ஜே? 1.


யார் இந்த பீ.ஜே (P.J) ?

தமிழ் பேசும் நல்லுலகில் இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு தனது வாழ்நாளையே அர்பணித்த சகோதரர் பீ.ஜே அவர்கள் தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்கும் இவ்வேலையில் சகோதரர் பீ.ஜே யைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் விதமாகவும், தெரிந்தவர்கள் இன்னும் சில தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்தக் ஆக்கத்தை வெளியிடுகின்றேன்.
இந்தியா, இலங்கை என்று தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஏகத்துவக் கருத்துக்கள் சென்றடைவதற்கு இறைவன் சகோதரர் பீ.ஜே அவர்களை காரணமாக்கினான் என்றால் அது மிகையாகாது.
குர்ஆன், சுன்னாவை வாயலவில் பேசிவிட்டு தனது வாழ்வில் அதன் வாசைன கூட இல்லாமல் இருக்கும் பிரச்சாரகர்களுக்கு மத்தியில் சொன்னதை தனது வாழ்வில் தன்னால் முடிந்த வரை பின்பற்றி நடக்கும் ஒரு சிறப்பான இஸ்லாமியப் பிரச்சாரகராக சகோதரர் பீ.ஜே அவர்களை நாம் கண் முன்னால் காணக் கிடைக்கிறது. அல்லாஹ் அவருடைய நோயை குணப்படுத்தி அவரின் பேச்சாற்றல் மூலமும், எழுத்தாற்றல் மூலமும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்போமாக!

http://rasminmisc.com/pj-enral-yaar/

உணர்வு வார இதழின் விமர்சனங்கள்..


மற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா?

கேள்வி :
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ரஸ்மின் நீங்கள் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு கேள்வி கேட்கிறேன் அது சம்பந்தமாக மார்க்கத்தில் தீர்வு என்ன? கேள்வி : தமிழ்நாட்டில் இல்ல TNTJ வின் உணர்வு வார இதழில் மற்ற நம் சமுதாய இயக்கத்தை பற்றி குற்றம் குறை கூறி செய்திகள் இல்லாத நாட்களே இல்லையே! அவர்கள் செய்வது மார்க்க அடிப்படையில் சரிதானா? sharfudeen abudhabi, uae
 பதில்.
அன்பின் சகோதரர் ஷர்புதீன் அவர்களுக்கு !
உங்கள் கேள்வி விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகள் மற்றும் செய்திகளை வெளிக்கொணரும் முகமாக உணர்வு என்ற சமுதாயப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவருகிறது. அப்பத்திரிக்கையில் மற்ற அமைப்புக்களை விமர்சித்து எழுதுவது சரியா என்பதுதான் உங்கள் கேள்வி.
எந்த ஒரு அமைப்பானாலும் இஸ்லாமிய அமைப்பாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் போது அவ்வமைப்பு தனது செயல்பாடுகளையும் இஸ்லாமிய கொள்கைக்குற்பட்டதாகத் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை இந்தியாவைப் பற்றியோ அல்லது தமிழகத்தைப் பற்றியோ அறியாமல் எழுதவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் நான்.

Monday, October 22, 2012

அந்நஜாத்தின் இப்பிடிவாதப் போக்கு நியாயமா?



இப்னு ஹத்தாது
அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே இல்லையா? முஸ்லிம்கள் மிகவும் அவசிய மாகத் தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் நிறைந்து காணப்படுகின்றனவே. அவற்றை எடுத்து அந்நஜாத்தில் எழுத வேண்டியதுதானே என அங்கலாய்க்கிறார்கள்.
கடந்த 27 வருடங்களாக புரோகிதத்தின் மெகா கெடுதிகள் பற்றி அந்நஜாத்தில் எழுதியும் இன்னும் அவர்கள் புரோகிதர்களைப் புரிந்து கொள்ள வில்லை; அவர்கள் மீது பக்தியும் பாசமும் இன்னும் எஞ்சியிருக்கிறதோ என்ற சந்தேகமே மிகைக்கிறது. மேலும் அந்நஜாத்தைப் படிக்கிறார்களே அல்லாமல் அதில் குறிப்பிடப்படும் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் உடனுக்குடன் குர்ஆனை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதில்லை என்ற ஐயமும் தோன்றுகிறது. அப்படி குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே புரோகித வஞ்சகப் புத்தியைப் புரிந்து வருகிறார்கள். இன்னும் கடுமையாக முஸ்லிம் மதகுருமார்களாகிய மவ்லவிகளை அடையாளம் காட்ட வேண்டும், ஏனென்றால் இன்னும் உலகத் தில் நேர்வழியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கணிச மான தொகையினர், இப்புரோகிதர்களின் மாய வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை என்றே கூறுகின்றனர். அவர்களோ எண்ணிக்கையில் மிகமிகச் சொற்பமாகவே இருக்கின்றனர்.
அல்குர்ஆனையும், நபி நடைமுறைகளையும் மட்டுமே பற்றிப் பிடித்து நடந்தால் மட்டு

ஜகாத்



விமர்சனம்: 1986லிருந்து இதுநாள்வரை மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். மனித அபிப்பிராயத்திற்கு மார்க்கத்தில் அணுவளவும் இடமே இல்லை என்று சொல்லி வந்த நீங்கள், இப்போது ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அலீ(ரழி) போன்றோரின் சொந்தக் கருத்துக்களை ஆதாரமாக வைத்து, ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வருடா  வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறி வருவது, உங்களின் முன்னைய கூற்றுக்கு முரண்படுவதாகப் பரவலாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறதே? இதுபற்றிய உங்களின் பதில் என்ன?                    A. கமால், திருச்சி.

விளக்கம்: மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருக்கும் அதிகாரமில்லை என்று கூறும் 7:3, 33:36,66,67,68 இறைக்கட்டளைகளில் எமக்குத் துளியும் சந்தேகமில்லை. மேலும் 9:34 இறைக்கட்டளைப்படி சேமித்து வைக்கும் பொருளுக்கு வருடாவருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் கொடுப்பது நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்ததையே உமர்(ரழி), அலீ(ரழி) போன்றோர் எடுத்துக் கூறுகிறார்கள் என்பதில் சுயநலமற்ற, உலகத்தை மறுமையைவிட அதிகமாக நேசிக்காத, நடுநிலையாளர்கள் உணர்ந்தே செயல்படுத்தி வருகிறார்கள.

72 வழி கெட்ட கூட்டங்கள்


அந்த 72 வழி கெட்ட கூட்டங்கள் ஹதீஸும்  பி. ஜே. கூட்டங்களின் வழி கெட்ட விளக்கங்களும்

நபி அவர்களுடைய 73 பிரிவு என்ற மேற்கண்ட ஹதீஸினை விளக்குவதற்காக தென் இந்தியாவைச் சேர்ந்த வழிகேடான தர்க்கவாதத்தில் மார்க்கத்தைச் சுமக்கும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தனது உரையொன்றில் தனது தலைப்பாக 'அந்த 72 கூட்டங்கள் யார்?" என்று வைத்தார். இதுவே அவருடைய தலைப்பு.
தனது தலைப்பில் 72 கூட்டங்களைப் பற்றி விளக்கிவிட்டு அந்த 72 வழிகேடான கூட்டத்தினுல்லேயே நபித்தோழர்களையும் அவர்களைப் பின்தொடந்தவர்களையும் சேர்த்து விடுகிறார். இதில் இந்த மனிதன் எந்தளவு மயக்கத்தை சமூகத்தினுள் ஊற்றிவிட்டான் என்று விளங்கமுடிகிறது.
ஏனென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வார்த்தை என்னவென்பதை தெரிந்து கொண்டே இந்த மனிதன் அந்தத் தெளிவான நபி மொழியின் வார்த்தையை மயக்கமானதாக மாற்றிவிட்டான். 

பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்?


அன்பின் சகோதர சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
கடும்கோபம் கொப்பளிக்கஆத்திரத்தின் உச்சிக்கே சென்று ஹிஜ்ரிகமிட்டிக்கு பதில் என பீஜே புனைந்துள்ள அந்த அபத்தக் கருத்துக்களை நாமும் பார்வையிட்டோம். ஹிஜ்ரி கமிட்டியினர் மூளை வரண்டவர்கள்குழப்பவாதிகள்வரட்டுக் கும்பல்விவாதம் என்றவுடன் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவர்கள் என்றெல்லாம் பீஜே தனக்கே உரித்தான பாணியில் நம்மீது  இட்டுக்கட்டியுள்ளார். 
கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது  கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும்தெரிவித்துக்கொள்கிறோம். இப்பதில் பதிவு சற்று நீளமாக ஆகிவிட்டதை பொறுத்துக்கொண்டு,பொறுமையாக இறுதிவரை  படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்-PJ பதில்கள்





பிறை பார்த்தல் பற்றி எழுப்பப்பட்ட அறிவுப்பூர்வமான? கேள்விகளுக்கு சகோதரர் பி.ஜெ. அவர்கள் தந்த பதில்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறை சாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும் ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

இவர்களின் வரட்டு வாதங்களுக்கு சகோதரர் நாஷித் அஹ்மத் என்ற நேயர் பதில் தயாரித்து அனுப்பி உள்ளார். சிறந்த பதிலாக அது இருந்ததால் இது போன்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவரது பதில்களை வெளியிடுகிறோம்.

வரட்டுக் கேள்வி -1
பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர் ஆன் வசனமோ ஹதீஸோ இருக்கிறதா

நேயர் பதில் - 1
1 . பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு, பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர். "நேற்று பிறை பார்த்தோம்", என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.

நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித் தருவதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறதே தவிர, வேறு முறை குறித்தல்ல.

இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!

எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்..

முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே , அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

இவர்களின் மதியீனத்தை காட்டும் வகையில் ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.

வரட்டுக் கேள்வி -2
ஹதீதில் மேக மூட்டம் என்று இருக்கிறதா? மறைக்கப்படும் போது என்று இருக்கிறதா? பார்க்க 10:71 கும்ம குப்பிய கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ் பதங்கள் என்ன?

நேயர் பதில் – 2
ஹிஜ்ரா காலண்டர் என்று மார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலை நாட்டும் இந்தக் கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகத் தான் கேட்பார்கள். இதற்கு இது தான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

10:71 வசனத்தை காட்டி மேற்கண்ட சொல்லுக்கு மறைத்தல் என்று தான் பொருள் என வாதிடுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு அறிவும் இல்லை. மொழி அறிவும் இல்லை. தனித்துச் சொல்லப்பட்டாலும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தனித்துச் சொல்லப்படும் போது ஒரு அர்த்தமும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் போது வேறு அர்த்தம் தரக் கூடிய சொற்களும் உள்ளன.

உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும்.

கிறுக்கன் என்று நேரடி அர்த்தத்தில் உள்ளதா என்று கேட்பது போல் இவர்களின் கேள்வி அமைந்துள்ளது.

பிறையுடன் வானத்துடன் தொடர்பு படுத்தி மேற்கண்ட சொற்கள் பயன்படுத்தி சொல்லப்படும் போது கண்ணுக்குத் தெரியாமல் மேகம் அல்லது பனி மூட்டத்தால் மறைத்து பார்க்க முடியாமல் செய்தல் என்ற பொருளைத் தரும்.

இதனால் தான் மேகத்துக்கு கும்ம என்ற சொல்லில் இருந்து பிறந்த கமாம் என்ற சொல் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க 2:57, 2:210, 7:160, 25:25

பொதுவாக கும்மவுக்கு மறைத்தல் என்று பொருள் சொல்லும் அகராதி நூல்கள் பிறையுடன் அதைச் சேர்த்து சொல்லும் போது கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணால் பார்க்க முடியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் பிறையை மறைப்பது என்று கூறுகின்றன.

ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس

[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]

ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ

[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]

وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .

وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ

[المصباح المنير في غريب الشرح الكبير 7/ 84]

وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته

[لسان العرب 12/ 441]

ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر

[مختار الصحاح ص: 488]

மேற்கண்ட அரபு மூலம் கட்டுரையாளருடயது அல்ல. நாம் சேர்த்துள்ளதாகும்

(ஹும்ம்) மறைக்கப்படும், என்ற வார்த்தை ஒரு பொதுவான சொல். எந்த பொருளோடு அது இணைத்து பேசப்படுகிறதோ, அதை பொறுத்து அந்த சொல்லுக்கு அர்த்தம் வேறுபடும். பொதுவாக, ஒரு மனிதரை நோக்கி சொன்னால், "குழப்பமடைந்தவர்" என்று பொருள்.

பொதுவாக, ஒன்றைக் குறித்து சொன்னால், மறைக்கப்பட்டது என்று பொருள். வானத்தோடு இணைத்து சொல்லப்படுமானால், வானத்தில் எது மறைக்கும்? என்று சிந்தித்து, அதை இந்த சொல்லுக்கு பொருளாக கொடுப்பது தான் முறையான செயல். அவ்வகையில் பார்த்தால், ஹும்ம் - என்ற மறைக்கப்படுதல் என்பதற்கு இந்த இடத்தில் "மேகம் மறைத்தல் " என்ற பொருள் தான் கொடுக்க முடியும்.

எந்தப் பொருளையும் முதலில் நம் நிலையில் இருந்து மட்டும் சிந்திப்பதால் ஏற்படும் கோளாறு தான் இத்தகைய கேள்விகள். இந்த ஹதீஸ் இறங்கிய காலத்தில், இதற்குரிய பொருள் என்ன? இதைக் கூறிய பொழுது, சஹாபாக்கள் எவ்வாறு இதைப் புரிந்திருப்பார்கள்? என்பதைச் சிந்தித்தால் இது போன்ற அறிவார்ந்த(?) கேள்விகள் எழாது.

வரட்டுக் கேள்வி – 3
நபி (ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?

நேயர் பதில் - 3
இந்தக் கேள்வியின் மூலம் பிறையைக் கணிக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை எப்படி நிறுவுகிறார்கள் என்பதை இவர்கள் விளக்கவில்லை. இத்தகைய அறிவுப்பூர்வமான வழிமுறை இவர்களிடம் கடுகளவும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களை நோக்கி கேள்விகள் கேட்டால் அந்தக் கேள்வி மூலம் என்ன கருத்தை எப்படி நிலை நாட்டப்போகிறார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இவர்களின் கேள்விப்பட்டியலில் இந்த அறிவுப்பூர்வமான அம்சம் இல்லவே இல்லை.

இவர்கள் கேட்டுள்ள மூன்றாவது கேள்வி கூட முரண்பாட்டின் வடிவமாக உள்ளது

29 அன்று பிறை பார்க்கச் சொல்வது தினசரி பார்க்க வேண்டும் என்பதற்கு முரணானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததாகும்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாகச் சொல்லியுள்ள அறிவிப்பில், "நேற்று" என்பது 29 ஐ தான் குறிக்கும். மாதம் என்பது 29 நாட்கள் தான். பிறை தெரிந்தால் அந்த மாதம் அதோடு முடியும். பிறை தெரியவில்லை என்றால் முப்பதாக பூர்த்தி ஆகும்.
இதனடிப்படையில் பார்க்கும் போது, ஒரு மாதம் முடிவடைந்து விட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அந்த மாதத்தின் 29 நாட்கள் கழித்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும். இது அந்த அறிவிப்பிலேயே புரிகிறது ; மட்டுமல்லாமல், வாகனக் கூட்டம் ஹதீசும் தெளிவுப்படுத்துகிறது.
29 இல் மட்டும் பார்க்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியை கேட்கிறார்கள். மாதத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியுள்ளது , 29 நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பதை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு நாட்களையும் நாம் கணக்கிட்டாக (எண்ணியாக) வேண்டும்.

இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் உளறியுள்ளனர்

வரட்டுக் கேள்வி – 4, 5, 6
மாத ஆரம்ப நாட்களில் பார்க்கப்படும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?

மறையும் பிறையைப் பார்த்து விட்டுத் தான் ஆரம்பிப்பதாக நபி (ஸல்) கூறியிருப்பார்களா

நபி (ஸல்) அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா

நேயர் பதில் – 4, 5, 6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன்னால் அந்தச் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நபிகள் நாயகம் ஸல் அவர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.

இவர்கள் அறிவும் சிந்தனையும் உள்ளவர்களாக இருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இது குறித்த தங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறையும் பிறையைக் கூறவில்லை. அதற்கு இதோ ஆதாரம் என்று வாதிட வேண்டும். தனது தரப்பு வாதமாக எதையும் வைக்காமல் கேள்வி கேட்பதில் இருந்து இவர்களின் மடமை தெளிவாகின்றது.

மறையும் பிறையைப் பார்த்து விட்டு ஆரம்பிக்க சொல்லி இருப்பார்களா? என்று கேட்பதன் மூலம் தங்களுக்கு கடுகளவும் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர்.

நாம் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதற்கு சூரியன் மறைவதைத் தான் காரணமாகக் கொண்டுள்ளோம். மறையும் சூரியனைப் பார்த்து விட்டுத் தான் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதாக நபிகள் சொல்லி இருப்பார்களா? அந்த அளவுக்கு நபிகளுக்கு விளக்ககுறைவு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று ஒருவன் கேட்டால் அவனை நாம் என்னவென்போம்? இனி மேல் மக்ரிப் தொழுகையை சூரியன் உதிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடுத்த கண்டு பிடிப்பை இந்தக் கூறு கெட்டவர்கள் வெளியிட்வார்கள் என்று எதிர்பார்ப்போம். மறையும் நேரத்தில் சில காரியங்களை துவங்கலாம். உதிக்கும் நேரத்திலும் துவங்கலாம். எதற்கு எப்படி ஆதாரம் கிடைத்துள்ளதோ அப்படி புரிந்து கொள்வது தான் மூளை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

ஆதாரம் எப்படி உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

முந்தைய கேள்விக்கான நமது பதில் மேலே தரப்பட்டுள்ள நிலையில், அந்த பதில் குறித்த இவர்கள் நிலையை இவர்களே விளக்கினால் இதற்கு பதில் கிடைத்து விடும்.
மாலை, மறையும் பிறையா உதிக்கும் பிறையா என்பதைக் கேள்வியாக கேட்பதற்கு முன்னர், பிறையை எப்போது, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு நாம் விடை வைத்திருக்க வேண்டும்.

வாகனக் கூட்டம் அறிவிக்கிற ஹதீஸில், மாலை பிறை பார்த்ததாக வருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தும் இருக்கிறார்கள் எனும் போது, பிறையை மாலை தான் பார்க்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

இப்போது நமது கடமை, மாலை பிறை பார்ப்பது தானே தவிர, அது உதிக்கும் பிறையா மறையும் பிறையா என்று ஆராய்ச்சியில் இறங்குவது அல்ல!

மறையும் பிறையைப் பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னது உறுதியாக தெரிந்த பிறகும் இப்படி சொல்லியிருப்பார்களா? என்று கேட்கப்படும் கேள்வி, நம்மை நோக்கிய கேள்வி அல்ல, நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி.!

இவர்களுக்கு விபரம் இல்லை என்பது நிரூபணமாகும் விஷயத்தில் நபிகளுக்கு விளக்கக் குறைவு என்பது தான் உங்கள் நிலையா? என்று கேட்பது எவ்வளவு அகங்காரம் கொண்ட கேள்வி. விபரம் கெட்டவர்களாக இவர்கள் இருந்து கொண்டு நபிகள் நாயகத்தை அப்படி சித்தரிக்கப் பார்ப்பதில் இருந்து இவர்கள் ஷைத்தானின் வலையில் விழுந்து கிடப்பவர்கள் என்பது தெளிவாகிறது



வரட்டுக்கேள்வி – 7
2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியமளிக்கிறாரோ (ஃபமன்ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா? அல்லது எவர் தலைப்பிறையை புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா?

நேயர் பதில் – 7

 "ஃபமன் ஷஹித மின்குமுஷ்ஷஹர " என்பதற்கு "யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ", என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும். ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டாலும் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர். இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

யார் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸ் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டத்தை நாம் இன்று கடைப் பிடிப்பதைப் போல நபி (ஸல்) அவர்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள் . அவர்கள் புறக்கண்ணால் பார்த்து , அதன் மூலம் அவர்களுக்கு இரண்டு நாள் வந்த பொழுதும் "யார் அம்மாதத்தை அடைகிறாரோ", என்ற வசனம் இல்லாமல் இல்லை !..

ஆக, இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பொருள் கொடுத்துள்ளார்கள் என்பதைச் சிந்தித்தால் இது போன்ற உளறல் கேள்விகள் எழாது.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட, நபி (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாள் ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா - மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன..


வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபி (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒரு குர்ஆன் வசனத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று நம் எவரும் கொடுக்க முடியாது என்பதை நினைவில் கொண்டால் இது போன்ற குழப்பவாதிகளிடமிருந்து சமுதாயம் தப்பித்துக் கொள்ளும்.!.
வரட்டுக் கேள்வி 8
8-எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்துக்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?

9-உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வெள்ளிக் கிழமை 24 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன் வெள்ளி என 48 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? வியாழன் வெள்ளிம்சனி என 72 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா?

10-சூரியக் கணக்கின்படி 1 தேதி 1 நாள் என்பது 24 மணி நேரம். திங்கள் செவ்வாய் போன்ற கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப்பிறையான முதல் நாள் 24 மணி நேரத்துக்குள் வர வேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடிப்பிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின் படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேசப் பிறை என்ற அடிப்படிய்ல் இரண்டா, நாள் தலைப்பிறை பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படியில் மூன்றாம் நாள் தலைப்பிறை என 24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள் 48 மணி நேரம் மூன்று நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா

நேயர் பதில் – 8, 9, 10 
8 , 9 , 10 : ஒரு நாள் என்பது 24 மணி நேரமா 48 மணி நேரமா என்று கேட்கின்றனர். ஒரு நாள் 24 மணி நேரம் தான். பிறை அடிப்படையில் இஸ்லாமிய நாட்களை முடிவு செய்யும் பொழுது ஒரு சாராருக்கு மாதத்தின் முதல் நாள் ஒரு தினத்திலும், இன்னொரு சாராருக்கு இரண்டாம் தினத்திலும் துவங்குவதை வைத்து, மாதத்தின் முதல் நாளே இரண்டு நாட்களாகி விட்டதைப் போன்று கேட்கின்றனர்.

ஒவ்வொரு சாராருக்கும் நாள் என்பது 24 மணி நேரம் தான் ஆகிறது. யாருடைய நாளும் 48 மணி நேரம் கொண்டதாக ஆகவில்லை.. கேள்வி கேட்பவர்கள் விளங்காமல் கேள்வி எழுப்புகின்றனர் என்றால் அதைப் படிப்பவர்களும் எதையும் விளங்க மாட்டார்கள் என்று எண்ணுவது வடி கட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.

மாதம் எந்த தினத்தில் துவங்குகிறது என்பதில் இரு நாள் வேறுபாடு வருவதால் மாதத்தின் முதல் நாளே இரண்டு நாள் ஆகி விட்டதாக அர்த்தம் இல்லை.

நாளின் துவக்கம் வேறுபடுவதால் யாருக்கும் 48 மணி நேரம் கொண்ட நாள் அல்லது 72 மணி நேரம் கொண்ட நாள் வரவே வராது. இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து தங்களின் மடமையை தாங்களே அம்பலமாக்கிக் கொள்கின்றனர்.

ஒருவர் காலை என்று சொல்லும் நேரத்தை இன்னொரு பகுதியில் உள்ளவர் மாலை என்று சொல்வார். காலையை எப்படி மாலை என்று சொல்லலாம். இதோ சூரியன் உதிப்பதை நான் பார்க்கும் போது நீ எப்படி மாலை என்று சொல்லலாம் என்று கேட்க முடியாது. ஏனெனில் நாம் உதிப்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் சூரியன் மறைவதை இன்னொரு பகுதியினர் பார்த்து விட்டுத் தான் மாலை என்கின்றனர்.

ஒரு பொருளை அடையக் கூடியதில் கால வித்தியாசம் இருக்கிறது என்பதால், அந்த பொருளே இரண்டாகி விடாது. மக்ரிபை அடைவதில் நமக்கும் சவுதிக்கும் இடையே இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து , இரண்டு மக்ரிப் என்று யாரும் சொல்ல மாட்டோம். மக்ரிபை அடைவதில் இரண்டு நேரங்கள்! என்று தான் எந்த அறிவார்ந்தவரும் புரிவோம். இதை யாரேனும் பிதற்றல் என்று சொன்னால் அவர்கள் தான் பிதற்றுகின்றனர்.

அதே போன்று, மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி, ஒரு பகுதிக்கு புறக்கண்களில் தென்படும் தலைப்பிறையானது உலகின் இன்னொரு பகுதியில் தென்படாது.

தென்பட்டவர்கள் முதல் நாளை அனுபவிப்பார்கள், தென்படாதவர்கள் மறுநாளை முதல் நாள் என கொள்வார்கள்.

நாளை அடைவதில் கால வித்தியாசம் ஏற்ப்படுவதை எந்த நிலையிலும் மறுக்க இயலாது எனும் போது, இரண்டு நாட்கள் என்றால் மாதத்தின் முதல் நாள் 24 மணி நேரமா அல்லது 48 மணி நேரமா என்று கேட்பதெல்லாம் வெறும் வறட்டு வாதமாக தான் கொள்ள முடியுமே தவிர, அறிவார்ந்த சபையில் ஏற்றுக் கொள்ளப்படாது.

எல்லோரும் வெள்ளிகிழமை தான் ஜும்மா தொழுகிறோம் என்பது உண்மை தான். யாரும் வியாழக்கிழமையோ சனிக்கிழமையோ ஜும்மா தொழுவதில்லை ர்ன்பதும் உண்மை தான். ஆனால் ஒருவர் வெள்ளிக் கிழமை என்று சொல்வது இன்னொருவருக்கு வியாழக்கிழமையாக இருக்குமா இருக்காதா? இது தான் கேள்வி.

உதாரணமாக தேதிக்கோட்டுக்கு (டேட்லைன்) இந்தப் பக்கம் இருப்பவர்கள் பகல் ஒரு மணியானதும் ஜும்மா தொழுவார்கள். ஆனால் தேதிக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவர்கள் அதை வியாழக்கிழமையாகக் கருதுவதால் அவர்கள் அந்த நேரத்தில் ஜும்மா தொழ மாட்டார்கள். மறு நாள் அதாவது இந்தப்பக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைக்குச் சென்ற பின் அவர்கள் வெள்ளிக்கிழமையை அடைந்து ஜும்மா தொழுகிறார்கள். அதாவது ஒரே நேரம் – பகல் ஒரு மணி- அருகருகே உள்ள இரண்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கிறதே? இது பிதற்றலா? ஒரே நாள் எப்படி வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று கேட்பது தான் பகுத்தறிவா?

இதை விட முக்கியமான ஒரு விஷயம் இவர்களின் மேற்கண்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றது. அதாவது இவர்கள் குர் ஆன் ஹதீஸ் கூறுவதை நம்பமாட்டார்கள் மாறாக இவர்களின் குறைமதிக்கு ஏற்ப அமைந்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அந்தச் விஷயம்.

ஒருவனுக்கு காற்றுப் பிரிந்து விட்டால் உளூ செய்ய வேண்டும் என மார்க்கம் சொல்கிறது. பிந்துவாரத்தில் காற்றுப்பிரிவதற்கும் கைகால்களைக் கழுவுவதற்கும் என்ன சம்மந்தம்? என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. மண்ணைத் தடவிக் கொண்டால் தூய்மையாகுமா? அழுக்காகுமா எனக் கூறி இதையும் மறுத்தாலும் மறுப்பார்கள் போலும். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

வரட்டுக் கேள்வி 11,12,13

11-பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது துல்லிய கணிணி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால். அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை 30ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவுபட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (29:92, 23:52) காக்கவா அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?

12- அன்று நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால் மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால் தான் அது தனது சுற்றுப்பாதையில் செல்லும். மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாகப் பொருள்படுகிறதே? நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?

13- அப்படி என்றால் சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் அனைத்தும் அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன்பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராக சுழன்று வருகின்றன என அல்குர்ஆனின் 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 போன்ற எண்ணற்ற கட்டளைகளை நபி (ஸல்) நிராகரித்து விட்டு (நவூது பில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்களில் பட்டால் தான் சுழலும். பார்வையில் படும் வரை பிரை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியுமா

நேயர் பதில் 11, 12, 13
பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறவே இல்லை என்று உளறி வந்த இவர்கள் இப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறையைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டனர். அந்தக் காலத்தை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்களாம்!

மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தைன் எந்தச் சட்டமும் பிற்காலத்தில் மாற்றப்படாது என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

பயணிகள் ஜம்மு கஸர் செய்ய சலுகை மார்க்கத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் பயணம் என்பது மிகவும் சிரமமானதாகவும், அதிக நேரத்தை விழுங்கக் கூடியதாகவும் இருந்ததால் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இன்று விமானப் பயணம் மிக எளிதாகவும் எவ்விதக் களைப்பும் சிரமமும் அற்றதாகவும் ஆகி விட்டதால் இப்போது ஜம்மு கஸர் கூடாது என்று இந்த மேதாவிகள் கூறுவார்களா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியது எதற்காக தெரியுமா என்ற அற்புதமான விளக்கத்தையும் இவர்கள் கொடுக்கின்றனர். அதாவது 29 ஆ 30ஆ என்று கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை நீக்குவதற்காகத் தான் பிறை பார்க்கச் சொல்லி அனைவரையும் ஒரு கருத்துக்குக் கொண்டு வந்தார்களாம்!

இவர்கள் சொல்வதில் கடுகளவாவது லாஜிக் இருக்கிறதா? மதீனாவில் மட்டும் இஸ்லாம் இருந்தால் இவர்கள் கூறுவது போண்ர நிலை ஏற்படலாம். உலகின் பல பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அப்போது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்னார்கள். இதனால் ஏற்படும் விளைவு என்ன? மதீனாவில் பிறை பார்க்கும் நாளில் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பிறை பார்க்க முடியாது. வெவ்வேறு நாட்களில் தான் பிறை பார்க்க முடியும். இதனால் வெவ்வேறு நாட்களில் தான் பெருநாள் ஏற்படும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

சம்மந்தமில்லாத வசனங்களைப் பொருத்தமில்லாமல் இணைத்து வாதம் செய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை. 21 :92 வசனத்தில் அல்லாஹ் நம்மை நோக்கி "நீங்கள் ஒரே சமுதாயம்", என்கிறான். ஆகவே நாம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டுமாம்!

ஒரே சமுதாயம் என்று பெருநாள் கொண்டாடுவதற்கா அல்லாஹ் சொல்கிறான்? இறைவனை வணங்குவதைக் குறித்து விளக்குவதற்காகச் சொல்லும் வசனம் அது. அதை பெருநாளோடு தொடர்பு படுத்தி தங்களைச் சிந்தனையற்றவர்கள் என்று தாங்களே நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்..

ஒரு வாதத்திற்கு, நாம் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் எத்தனை சமுதாயம்? 22 சமுதாயமா? அவர்களுக்கு மேற்கூறப்பட்ட வசனம் பொருந்தாதா? அவர்கள் காலத்தில் ஏன் ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடவில்லை?

அடிப்படையற்று வாதம் வைத்தால் இவ்வாறு தான் உளறலான வாதமாக சென்று சேரும்!

அடுத்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், சந்திரனின் இயக்கம் மிக துல்லியமாக இருக்கும் பட்சத்தில், நம் கண்களில் பட்டால் தான் மாதம் துவங்கும், இல்லையெனில் துவங்காது என்று சொல்வது சந்திரனின் துல்லியத்தில் சந்தேகம் கொள்வது போல் உள்ளதே? என்று கேட்கின்றனர்.

பிறை தெரிந்தால் மாதம் பிறக்கிறது, என்று முடிவு செய்வதற்கும், பிறை தெரிந்தால் தான் பிறை துல்லியமாக இயங்குகிறது என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.

பிறை தென்பட்டாலும் தென்படாவிட்டாலும், பிறையின் ஓட்டத்தில் யாரும் சந்தேகம் கொள்வதில்லை. பிறை தென்படாவிட்டால், துல்லியமாக ஓடிக் கொண்டிருக்கும் பிறையை நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை, அவ்வளவு தான் !

நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் வழி சொல்லித் தருகிறார்கள்.

முதல் பிறையை நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டித் தருகிறான் என்ற நபி மொழி இதற்கு பொருத்தமான வழியாக இருக்கிறது.

கேள்வியையும் முன்வைத்து, அதற்குரிய வழியையும் அல்லாஹ்வே சொல்லி தந்து விட்ட பிறகு, இவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவது நம்மிடமா அல்லது அல்லாஹ்விடமா?
வரட்டுக் கேள்வி 14
அல்குர்ஆன் 3:13ல் காணப்படுவது போல் எதிரிகள் தம் புறக்கண்ணால் பார்த்தார்கள் (ரஃயல் ஐன்) என்றிருப்பது போல் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரேயொரு ஹதீஸும் நேரடியாகக் கூறாத நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நீங்கள் அல்குர்ஆன் 22:27ல் ஹஜ்ஜுக்கு நடந்தும் தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களிலும் வருவார்கள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லி இருந்தும் அல்லாஹ்வின் இக்கட்டளையைப் புறக்கணித்து விட்டு இன்று ஹஜ்ஜுக்கு விமானத்தில் செல்வதை எந்த அடிப்படையில் சரி காண்கிறீர்கள்?

நேயர் பதில் 14

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரு ஹதீஸ் கூட கூறவில்லை என்பது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை முதலாவது கேள்விக்கான பதிலில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். அதுவே இந்த உளறலுக்கும் உள்ள பதலாகும். மேலும் அந்தக் காலத்தில் சொன்னது இந்தக் காலத்துக்கு பொருந்தாது என்ற ஷைத்தானின் சிந்தனை இவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போய் விட்டதால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை உதாரணமாகக் காட்டி தங்கள் மடமைக்கு சாட்சி சொல்கிறார்கள்.

14 . மேற்கண்ட வாதத்தை அறிவார்ந்த கேள்வி என்று நினைத்து முன் வைக்கிறார்கள்.
அதாவது, குர்ஆனில், 22 :27 இல் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொல்வதால் நீங்களும் இன்று ஒட்டகத்தில் செல்ல வேண்டியது தானே? ஏன் விமானத்தில் செல்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

குர்ஆன் குறித்த ஞானம் இல்லாத காரணத்தாலும், நுனிப்புல் மேய்வதாலும் ஏற்படும் பாதிப்பு தான் இது போன்ற கேள்விகள்..

அந்த வசனத்தையும், அது அல்லாத இன்ன பிற இறை வசனங்களையும், தெரிந்து கொண்டு வாதம் செய்தால் இது போன்ற கிறுக்குத்தனங்கள் கேள்வியாக எழுந்திருக்காது.

கியாம நாள் வரை ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று கூறப்படிருந்தால் தான் இவர்களின் கேள்வியில் கடுகளவாவது நியாயமிருக்கும். ஆனால் இந்த வசனம் இவர்கள் கற்பனை செய்து கூறும் அர்த்தத்தைத் தரவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற சொல்லை இவர்கள் இருட்ட்டிப்பு செய்து விட்டு குழப்பப் பார்க்கின்றனர்.

இந்த வசனத்தில், "உம்மிடம்" வருவார்கள் என்று அல்லாஹ், இப்ராஹீம் நபியை நோக்கிச் சொல்கிறான்.

இப்ராஹீம் நபியை நோக்கி உம்மிடம் ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொன்னால் உலகம் அழியும் வரை அனைவரும் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்ற கருத்து எப்படி வரும்?

இவ்வாறு கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், "அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது, மற்ற மற்ற காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, "உம்மிடம்", வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்.

இன்று நாம் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்றால் இன்றும் இப்ராஹீம் நபி மக்காவில் இருக்க வேண்டும். அப்போது தான் இவர்களது வாதம் செல்லுபடியாகும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், வருவார்கள், என்பதற்கும் வர வேண்டும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்தாலும் இவ்வாறான கேள்விகள் எழுந்திருக்காது.

ஒரு பெண் தனியாக ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்காக பயணம் செய்வாள் என்ற ஹதீஸில் வரக்கூடியதை வைத்து, எந்த பெண்ணும் ஹஜ் செல்வதாக இருந்தால் ஒட்டகத்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று யாரும் வாதம் செய்ய மாட்டோம். அல்லது, தனியாக தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் கூற மாட்டோம். தனியாக பயணம் செய்வதோ, ஒட்டகத்தில் பயணம் செய்வதோ அனுமதி தானே தவிர, கட்டாயமல்ல என்றே புரிந்து கொள்வோம்கிறோம். இதே போன்று எளிதாகப் புரிகிற ஒன்றை தங்கள் அபார(?) அறிவின் மூலம் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதற்கு இந்த கேள்வியே சான்றாகும்!

எனவே இப்ராஹீம் நபியிடம் அல்லாஹ் சொன்னது ஒரு முன்ன்றைவிப்பு. யாருமே குடியிருக்காத வனாந்தரத்தில் காபாவைக் கட்டியதாக நினைத்து நீ கவலைப்படாதே! காபாவைக் கட்டிய பின் உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒட்டகங்களில் உம்மிடம் வருவார்கள். இதை நீயே காணப்போகிறாய் என்று அல்லாஹ் சொன்னான். உம்மிடம் என்ற சொல்லுக்குள் இந்த அர்த்தம் அடங்கியுள்ளதை உணரும் அளவுக்கு இவர்களின் அறிவு வேலை செய்யவில்லை.

வரட்டுக் கேள்வி 15
நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தங்கள் மனைவிமார்களிடம் செல்வதில்லை எனக் கூறிவிட்டு அந்த மாதம் 29லேயே பிறயைப் பார்க்காமலேயே மாதம் முடிந்து விட்டது என்பதை ஜிப்ரீல் அலை அவர்கள் வந்து சொன்னதன் பேரில் முடித்துக் கொண்டார்களே பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொன்ன நபி(ஸல்)அவர்கள் தனது சொல்லுக்கே முரணாக நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஜிப்ரீல் சொன்னதன் பேரில் அறிந்து கொண்டார்கள். இங்கு பிறை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது உங்கள் பதில் என்றால் அதே போல் கோள்கள் சம்மந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அடிப்படையில் கணிணி கணக்கீட்டின் படி (கணிப்புப்படி அல்ல) மாதம் பிறப்பதை துல்லியமாக அறிந்த பின்பும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பது சரியா?

நேயர் பதில் 15
15 . ஒரே கேள்வி என்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் கேட்பதன் மூலம் பல கேள்விகளைக் கேட்ட தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணுவது இவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம், மாதம் பிறந்து விட்டது என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் கூட, புறக்கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் என்றால், புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதால் தான்.!.

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்று நீங்கள் சொல்வதில் இருந்தே என்ன புலனாகிறது என்றால், இன்றைய காலகட்டத்தில் தான் விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பது தான். நிரூபிக்கப்பட்டது தான் இன்றே தவிர, விஞ்ஞானம் என்றைக்கும் உள்ளது தான்!

என்றைக்கும் இருக்கும் விஞ்ஞானத்தை, அது நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதற்காக மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதாக இருந்தால், நிரூபிக்கப்படாத காலத்திலும் விஞ்ஞானம் என்பதும், பிறை என்பதும், அதன் துல்லியமான ஓட்டம் என்பதும் இருந்து தான் வந்துள்ளது!

அந்தக் காலகட்டத்தில் எந்த வழியைச் செய்வது சரி? நிரூபிக்கப்பட்டு விட்டதால் இன்று நீங்கள் செய்வது தான் சரி என்றால், நிரூபிக்கப்படாத காலத்தில் செய்தவைகள் குறித்த உங்கள் நிலை என்ன?

சரி, நபி (ஸல்) காலத்தில், அந்தக் காலத்துக்கு ஏற்ப நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் இருந்து வந்ததே! பயணம் செய்து வந்து பிறை தகவலைச் சொல்வது அன்றைய காலத்தில் உள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

ஒரு நபரை மற்றொரு இடத்திற்கு அனுப்பி பிறை தகவல் சேகரிப்பதும் அன்று இருந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

உலகில் ஒரு பகுதியில் பிறை பார்த்த தகவலை இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்லும் விஞ்ஞானத்தைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள், அதை முழுமையாக ஏன் பயன்படுத்தவில்லை என்ற நமது கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லாத வரை, இன்றைய நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தைப் பற்றி பேசி எந்த தகுதியும் இல்லை.

இந்த இடத்தில் குர்ஆன் கூறும் விஞ்ஞானத்தை நாம் மறுக்கிறோமா என்ற கேள்வி எழலாம்.

குர் ஆன் ஒன்றைக் கூறினால் அதை எந்த முஸ்லிமும் மறுக்க்க் கூடாது. ஆனால், பிறை குறித்தும், விஞ்ஞானம் குறித்தும் குர்ஆன் கூறுவது என்ன என்பதைச் சிந்தித்தால் உண்மை விளங்கி விடும்.

இறைவனின் வல்லமையையும், ஆற்றலையும் பறை சாற்றுவதற்காக, சூரியன் குறித்தும் சந்திரன் குறித்தும், அதன் துல்லியமான அமைப்பைக் குறித்தும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். அதன் மூலம் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன என்றும் சொல்கிறான்.
இதை நாம் எந்த நிலையிலும் மறுக்கவில்லை. சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன என்பதை மறுக்கவே இயலாது.

ஆனால், விஷயம் என்னவென்றால், சந்திரன் காலம் காட்டும் என்பது விஞ்ஞானத்தின் படி முன்கூட்டியே கணித்து முடிவு செய்வதால் மட்டும் தான் காலம் காட்டுமா? புறக்கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்வதால் காலம் காட்டாதா?

காட்டும்..!

நாம் செய்து வரும் வழியை தொடர்ந்து செய்து வந்தாலும் பிறை நமக்கு காலம் காட்ட்த் தான் செய்யும்.

பிறையைப் பார்த்து அது இரண்டாம் பிறையாக இருக்குமோ, மூன்றாம் பிறையாக இருக்குமோ என்றெல்லாம் சந்தேகம் கொண்ட சஹாபாக்களிடம் இப்னு அப்பாஸ் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை எடுத்துச் சொல்கிறார்கள்.
"நீங்கள் எப்போது பார்க்கிறீர்களோ, அப்போது தான் உங்களுக்கு முதல் பிறை. ஏதேனும் காரணங்களால் முதல் பிறை (நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி உள்ள முதல் பிறை) உங்களுக்குத் தென்படாமல் போனாலும், உங்கள் கண்களுக்குத் தென்படும் நாள் வரை, முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நீட்டித் தந்து விட்டான்!""

அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான்.

அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.. ஒரு வேளை பிறை (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல் இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமே நீடிக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்து கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்
(www.onlinepj.com)

பிஜேக்கு ஒரு பாமரனின் பதில்கள்.



அன்புள்ள இஸ்லாமிய மார்க்க சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்!)

நான் இக்குழுமத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், பல குழுமங்களில்
ஃபார்வார்டு செய்யப்படுவதால் என் மெயில் ஐடிக்கும் ஃபார்வர்டு
செய்யப்பட்டு  எனக்கும் தொடர்ந்து மெயில்கள் வர ஆரம்பித்துள்ளது. நானும்
நல்ல விஷயங்கள் உள்ளதால் செலக்டிவாக மெயில்களைப் படிப்பது உண்டு.

ஆனால், தற்பொழுது சில காலமாக வரும் மெயில்களின் பொருள் படித்து மிகுந்த
மனவேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி உள்ளேன். ஆம், இது அபுசுமையா -
பீஜே இடையிலான கருத்து பரிமாற்றம் - (வீண்) விவாதம்.

Tuesday, July 3, 2012

அண்ணனுக்கு ஒரு அனுதாப [பி ] கடிதம்!


அஸ்ஸலாமு அலைக்கும் ,,,
வல்ல ரஹமானை போற்றி புகழ்ந்தவனாக ...

அன்புள்ள அண்ணன் pj அவர்களுக்கு நலம், நலம் பல சூழட்டும் ...

நிற்க ; உங்களின் மார்க்க பிரசாரத்தினால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன் ,,நீங்கள் பேசிய எந்த தலைப்புள்ள குறுந்தகடுகள் வெளி ஆனாலும் முதலில் அதை வாங்கி பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன் ,,அந்த அளவிற்கு உங்களின் பேச்சாற்றலையும், மார்க்க விளக்கங்களையும் 
பின்பற்றகூடியவன். உங்களை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களிடம் மல்லுக்கு நிற்பவனில் முதலாமானவன் என்றுகூட சொல்லலாம், 

முஸ்லிமகளுக்கு முட்டை என கூறி விட்டு நிரூபிக்க முடியாமல் நின்ற கூமுட்டை!



அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு முட்டை என ரொம்ப நாளைக்கு அப்புறம் அண்ணன்   ஜமாஅத் நடத்திய   ஒரு சமுதாயப் போராட்டமும் சப்பென்று போனது மட்டுமில்லாமல்,  இதைவைத்து தமுமுகவை ஒரு பிடிக்கலாம் என பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் அதிலும் மண்ணை அள்ளிப் போட்டது அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு! இந்த மருத்துவர் தேர்வில் 52 முஸ்லிகளுக்கு இடம் கிடைத்துள்ளதை   பெயர் பட்டியலோடு தமுமுக வெளியிட்ட விளக்கத்தை அந்த அறிவிப்பு மேலும் உறுதி செய்தது!  

பணிநியமன ஆணை; தன்னைத் தானே பொய்யனாக்கி கொண்ட அண்ணன்.


தற்காலிக மருத்துவர் பணிநியமன விசயத்தில் அண்ணன் மண்ணைக்கவ்விய  காட்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறோம். இந்த பணிநியமன விசயத்தில் அண்ணன் அளவுக்கு அந்தர்  பல்டிகளை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதிகள் கூட செய்யமுடியாது. இவர் அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சிய அரசியல்வாதியாக இருக்கிறார். 

1349 பேர் பணி நியமனம் செய்யப்பட்டார்கள் என்றார். அது பணி நியமனம் அல்ல; வெறும் கவுன்சிலிங்கு தான் என்று ஜவாஹிருல்லாஹ் உரிய சான்றுகளுடன் நிரூபித்தவுடன், பணிநியமனம் என்ற தனது புராணத்தை விட்டுவிட்டு கவுன்சிலிங் என்று பல்டியடித்தார்.

JUN 29 அரசாங்கம் கரிபூசியது அண்ணன் முகத்திலா? ஜவாஹிருல்லாஹ் முகத்திலா?

ஒரு பொய்யை மறைக்க ஒன்பதாயிரம் பொய்களை அள்ளிவிடும் அண்ணன்,
மருத்துவர் பணி நியமனத்தில் 1349 பேர் பணிநியமன ஆணையையும் அதில் முஸ்லிம்கள் பூஜ்ஜியம் என்பதையும் காட்டமுடியாமல் திண்டாடி வரும் அண்ணன், தினந்தோறும் பலபக்க கதையளந்து தனது படுதோல்வியை மறைக்க படாதபாடுகிறார். அதில் பணிநியமனம் என்ற தனது கருத்தை மாற்றிக்கொண்டு ''கலந்தாய்வு' என்று கம்பிநீட்டிய காட்சியை நேற்று எழுதினோம். இப்போது கொஞ்சமும் வெட்கமின்றி, ''மண்ணடியில் மக்கள் வெள்ளம்' என்ற தலைப்பில் ஒரு செய்தியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கேவலத்தைக் கூட சாதனையாக மாற்றுவதில் தன்னை விஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். இந்த செய்தியில், முஸ்லிம்கள் 52 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் அவர்களின் மூலம் பெற்று ஜவாஹிருலலாஹ் அவர்கள் வெளியிட்ட பெயர் பட்டியலைப்பற்றி, ''நமது ஜால்ரா மன்னர்தான், “எனக்கு அவர் தந்தார்; இவர் தந்தார்” என்று கூறிக்கொண்டு, கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திரிகின்றார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்' 
என்று கூறியுள்ளார் அண்ணன்.

அத்தஹிய்யாத்தில் விரல் அசைத்தல் நபிவழியே! மறுப்புக்கு மறுப்பு


தொழுகையில் அத்தஹிய்யாத்தில் விரல் அசைத்தல் நபிவழி என்பதை ஆதாரத்துடன் சொல்லி வருகின்றோம். ஆனால் இதை ஏற்காத மத்ஹப்வாதிகளும் ஹதீஸ் கலை பற்றிய ஞானமில்லாமல் தமக்குத் தாமே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்பவர்களும் சில பிரசுரங்களை வெளியிட்டு இது குறித்த ஹதீஸை பலவீனமானது என்பதை நிறுவ முயன்றுள்ளனர். இந்தப் பிரசுரங்களுக்கும் நூலுக்கும் அப்பாஸ் அலி அவர்களின் தக்க மறுப்பொன்றை ஆன்லைன்பீஜே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். வாசகர் நலம் கருதி அந்து மறுப்பாய்வை  எமது தளத்திலும் வெளியிடுகின்றோம்.

தொழுகையில் விரலசைப்பது தொடர்பான ஆய்வுக் கட்டுரை

தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைப்பது பெரிய சர்ச்சைக்குரிய சட்டமாக இன்றைக்கு சிலரால் சமுதாயத்தில் ஆக்கப்பட்டு விட்டது.

7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.


Home  ஊடகங்களில்  அச்சு ஊடகம்  தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். ஜவாஹிருல்லாஹ் MLA பேச்சு

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். ஜவாஹிருல்லாஹ் MLA பேச்சு

E-mailPrintPDF

இஸ்மாயீல் சலபியின் அறிவீனத்துக்கு மறுப்பு


July 2, 2012
இலங்கை தஃவாக் களத்தில் வெளிநாட்டு நிதிக்காகவும் கொமிஷனுக்காகவும் தவ்ஹீத் பேசிய போலித் தவ்ஹீத் வாதிகள்  இன்று தங்களுக்குள் பல இயக்கங்களாகப் பிரிந்து, பணம் சம்பாதிப்பதில் பனிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். குராபிகளுக்குப் பள்ளி கட்டி, அதில் கமிஷன் அடிப்பதில் நீயா? நானா? என்று கொழுத்த கொழுவோராக மாறி, கஷ்டப்பட்டு வளர்த்த தவ்ஹீதை புதைத்து வருகின்றனர்.
தங்களுக்குள் பொறாமையால் அர்ப்ப நிதிக்காக தெருச் சண்டையில் ஈடுபட்ட இந்த தவ்ஹீத் வேடம் போட்ட ஆசாமிகள், இன்று தங்கள் பகை மறந்து, தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டுள்ளனர். காரணம் நிதிக் கையாடல் பற்றி பீஜே விமர்சித்தவுடன் அடிவயிற்றில் கைவைத்துவிட்டார் என்று கொதித்து எழுந்தனர்.

அம்பலமானது ‎ம.ம.க.வின் ‎சமுதாய துரோகம்! ‎


செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, June 27, 2012, 21:54
‎1349 ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர்கள் கலந்தாய்வுக்காக ‎அழைக்கப்பட்டதில் ஒரு முஸ்லிமைக் கூட அழைக்காத தமிழக ‎அரசின் பச்சைத் துரோகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‎மாபெரும் முற்றுகைப் போராட்டத்தைக் கடந்த 14.06.12 அன்று ‎நடத்தியது.‎
சென்னையைக் கிடுகிடுக்க வைத்து, ஆட்சியாளர்களை அரள வைத்த ‎இந்தப் போராட்டத்தின் வாயிலாக அதிர்ந்து போயுள்ளது தமிழக அரசு. ‎தமிழக அரசின் துரோகத்தை வெளிக்கொண்டு வந்த தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் போராட்டத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் ‎கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ‎
இந்தப் போராட்டத்தின் வீரியத்தை அனைத்து மீடியாக்களும், ‎உளவுத்துறையும் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் ‎விளைவாக ஆளுங்கட்சி விழிபிதுங்க, சம்பந்தப்பட்ட மருத்துவர் ‎தேர்வாணையத்திற்கு பிரஷர் மேல் பிரஷர் பறக்க, நாமும் இது குறித்து ‎வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மருத்துவர் தேர்வாணையத்தையும் ‎உணர்வு வார இதழ் சார்பாக தொடர்பு கொண்டோம்.‎
சென்னை சாந்தோமில் உள்ள அரசு வேலைவாய்ப்பு பதிவு ‎அலுவலகத்தின் இணை இயக்குநர் அவர்களைச் சந்தித்து ஒப்பந்தப் ‎பயிற்சி மருத்துவர்கள் நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 1349 பேர்களில் ‎ஒரு முஸ்லிம் கூட அழைக்கப்படாததற்கான காரணம் என்ன என்று ‎கேட்கப்பட்டது.‎
முஸ்லிம்களுடைய பட்டியலை அவர்கள் கேட்காததால் நாங்கள் ‎வழங்கவில்லை:‎

ம.ம.கவின் துரோகத்திற்கு மரண அடி! மக்கள் வெள்ளத்தில் மிதந்தது மண்ணடி!!


இடஒதுக்கீடு விஷயத்தில் ம.ம.கட்சி செய்த சமுதாய துரோகத்தை மக்களுக்கு தோலுரித்துக்காட்டும் முகமாக கடந்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மண்ணடியில் உள்ள தம்புச்செட்டி தெருவில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை வடசென்னை டிஎன்டிஜே நடத்தியது.
22.06.12 அன்று வெள்ளிக்கிழமைதான் இதற்கான அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் அவகாசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமுதாயத்தின் விழிப்புணர்வை உலகிற்கு பறைசாற்றியது.
மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்திய பொதுக்கூட்டம் :

சமுதாயத்தின் குப்பைகளும் கூளங்களும்


கடந்த 20 வருடங்களுக்குள் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்த்திற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம்.

சில புதிய கருத்துக்கள் கவர்ச்சியாக சொல்லப் பட்ட போது முஸ்லிம் பொதுமக்களும் இளைஞர்களும் அவசரப்பட்டு அந்த குழப்பங்களுக்குள் சிக்கிக் கொண்டதாகும்.

இன்று ஏராளமான முஸ்லிம்கள் அப்புதிய இயக்கங்களையும் அமைப்புக்களையும் ஏளனமாக, அவமானகரமானதாக பார்க்கின்றனர்.

Thursday, January 5, 2012

ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்.

Wednesday, December 14, 2011

சமுகமே ஒன்று படு


சமுகமே ஒன்று படு(ஒரு முறையாவது படியுங்கள்)-
செய்கு பாவலர் ஹாமீம்

  
சமுகமே ஒன்று படு
சமுகமே ஒன்று படு
சரியான முடிவை இன்று எடு
அன்று நான்கு கூட்டமாய் இருந்தோம்
இன்று நாற்பதாய் வளர்ந்தோம்
எழுபத்து மூன்றை நோக்கி
எட்டு எடுத்து வைக்கின்றோம்
ஒரு பக்கம் வளர்ச்சி -இதனால்
ஒரு சிலருக்கு அலர்ச்சி
வளர்ச்சியை கண்டதனால் -இன்று
வான் வழித்தாக்குதல்கள்
கிளர்ச்சியைத் தூண்டி கிருத்துவம் செய்யும்
கிருத்துவப்படைகள்

Sunday, November 27, 2011

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு - திருப்பூர்

முஸ்லிம்களின் தியாகப் பெருநாள் தினத்தில் கடந்த 6-ந் தேதி மழை வெள்ளம் திருப்பூர் மாநகரைச் சூழ்ந்தது. இதில் சத்யாநகர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இந்தப் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்தன.  இவர்களில் அனைத்து தரப்பைச் சேர்ந்த மக்களும் உள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய திருப்பூரில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து அனைத்து ஜமாத் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இதில் ஐக்கிய ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய இளைஞர் சங்கம்(ஐ.ஒய்.ஏ.), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சோஷியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, குர்பானி அறக்கட்டளை,  வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, அர்ரஹ்மான் டிரஸ்ட், எம்.ஐ.குரூப்ஸ், ஜமாஅத்துல் உலமா ஆகிய அமைப்புகள் இணைந்துள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் சேரவில்லை.

அல்லாஹ்வின் உதவியுடன் தனித்து களமிறங்கிய TNTJ

அல்லாஹ்வின் உதவியுடன் தனித்து களமிறங்கிய TNTJ




அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர,சகோதரிகளே!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். விபரம்  இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் திருப்பூர் பகுதியில் இருந்த அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி வேலைகள் செய்தது எந்த ஒரு அமைப்பும் குறை சொல்ல இயலாத அளவு தங்களால் இயன்ற அளவு வேலைகளை செய்தனர்  எனபது குறிப்பிடத்தக்கது இந்த பெரும் வெள்ள விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு  அனைத்து ஜமாத்தும் இணைந்து அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது . 

Wednesday, November 23, 2011

நமக்கு ஏன் வேண்டும் ஊடகம்?



இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஊடகம் வேண்டும் என்ற கோஷம் பல்லாண்டுகளாக ஒலித்து வருகின்றது. அப்படி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இஸ்லாமியர்களுக்கேன்றே பல்வேறு மாத இதழ்கள், வார இதழ்கள் வந்துகொண்டு தானிருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் இயக்கங்கள் சார்ந்தவைகளாகவும், தத்தமது இயக்கங்களைப் பற்றிய செய்திகளையும், அவர்களது சேவைகளையும் மட்டும் முன்னிறுத்தி செய்திகளை வெளியிடுவதோடு பிற இயக்கங்களை சாடியும் செய்திகள் வெளியிடும் ஒரு குறுகிய போக்கையே சார்ந்திருக்கின்றன.

Wednesday, November 16, 2011

சேவையும் எஸ்.டி.பி.ஐ. யும்

SDPI  சேவை

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூரில் SDPI ஊழியர்கள் மிக நன்றாக நிவாரணப்பணியில் ஈடுபட்டதாக அறிந்தேன். மகிழ்ச்சி..


ஆனால் ஒரு குறை.

எல்லா இடத்திலும் அரசியல்  செய்வதாக,
தன்னை முன்னிலைப் படுத்த,
விளம்பரம் தேட
அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பலமுனைகளில் இருந்தும் விமரிசனம் வருகின்றது.  

மாற்றிக் கொள்வீர்களா.?


நமது நோக்கம் சேவையா.?
அல்லது
அடுத்த தேர்தலில் வெற்றி பெற முதலீடாக வெற்று  விளம்பரமா.?