ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Tuesday, July 3, 2012

முஸ்லிமகளுக்கு முட்டை என கூறி விட்டு நிரூபிக்க முடியாமல் நின்ற கூமுட்டை!



அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு முட்டை என ரொம்ப நாளைக்கு அப்புறம் அண்ணன்   ஜமாஅத் நடத்திய   ஒரு சமுதாயப் போராட்டமும் சப்பென்று போனது மட்டுமில்லாமல்,  இதைவைத்து தமுமுகவை ஒரு பிடிக்கலாம் என பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் அதிலும் மண்ணை அள்ளிப் போட்டது அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு! இந்த மருத்துவர் தேர்வில் 52 முஸ்லிகளுக்கு இடம் கிடைத்துள்ளதை   பெயர் பட்டியலோடு தமுமுக வெளியிட்ட விளக்கத்தை அந்த அறிவிப்பு மேலும் உறுதி செய்தது!  
இந்த நிலையில் அண்ணன் என்ன சொல்லப் போகிறார் என ஆன்லைனில் லைவ் இல் உட்கார்ந்து பார்த்தால் தன் பக்க நியாயத்திற்கு ஒரு ஒரு ஆதாரப் பூர்வமான் கருத்தையும் வைக்க முடியாமல் திணறியது வெளிப்படையாக தெரிந்தது! சத்தியத்தை பேசிய போதெல்லாம் சதிராடிய அண்ணனின் நாவு நேற்று தடுமாறியது! முஸ்லிம்களுக்கு முட்டை! ஒரு சீட் கூட கிடைக்கவில்லை என்று சொன்ன அண்ணன் 52 பேர்களுக்கு வேலை கிடைத்திருப்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்ட பின் 'இல்லை அது தவறு ஒரு முஸ்லிமுக்கு கூட கிடைக்க வில்லை' எனும் தன் நிலையை நிருபிக்கும் சான்றுகளை வைப்பார் என எதிர் பார்த்தால் தமுமுக செய்த தவறுகளை பிடித்து தொங்கியதை பார்க்கும் போது அண்ணனை பார்க்க பரிதாபம ஆக இருந்தது.  

சமிப காலங்களில் ஒரு விஷயத்தை ஆராயாமல் தமுமுக அவசர அறிக்கை வெளியிடுவதும் பின்னர் அதை தங்கள் இணையத்தில் இருந்து எடுத்து விடுவதும் அந்த இயக்கத்தின் முடிவெடுக்கும் தன்மையில் உள்ள குறைபாட்டை காட்டுகிறது! உதாரணமாக கட்டாய திருமண சட்டத்தை ஆதரித்து முதலில் அறிக்கை வெளியிட்டு விட்டு பின்னர் மாறியது, பாபர் மஸ்ஜித் நிலம் பற்றிய அலஹாபாத் தீர்ப்பை முதலில் வரவேற்று பின்னர் மாறியது, முதல்வர் செய்த உதவிகளை  பார்த்து மக்கள் தானே புயல் தங்கள் மாவட்டத்திற்கு வராதா?  என ஏங்குகிறார்கள் என சொல்லி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு பின் தவறு என உணர்ந்தது என்பது போல் தற்போது இந்த மருத்துவர் நியமன விவகாரத்திலும் அண்ணனின் நிலைப்பாட்டையே அவர்களும் எடுத்து முதலில் வெளியிட்ட அறிக்கையை இணையத் தளத்தில் எடுத்துள்ளார்கள். 

இந்த அறிக்கையைக் காணோம் என்பதைத தான் அண்ணன் நேற்று பெரிய ஆதாரமாக் காட்டினார்.இதில் ஒரு வாசகம் இருப்பதாக மேடையில் சொல்லி விட்டு. கொஞ்ச நேரம்  அதை தேடி அந்த வாசகம் இல்லாமல் போக, 'ம்ம்  இந்த பேஜ்ல அது வரக் காணோம்! சரி  இப்ப நாம என்ன கேட்குரோம்னா' என அண்ணன் சமாளித்த போது  அசடு வழிந்தது!

ஆனால் இது கூட அண்ணனின் நிலைப்பாட்டுக்கு ஆதாரம் அல்ல! தமுமுகவிற்கு  சாதகமான ஆதாரம் தான்! ஏன் எனில் நாம் சரி என்ற ஒரு விஷயம் தவறு என பிறகு  தெரிந்தால் அதை மாற்றிக் கொள்வதற்கு வெட்கப்படாமல் சமுதாய நலனை கருத்தில் கொண்டு தங்கள் கருத்தை தூக்கிப்போடும் குணம் தமுமுகவிடம் இருப்பதை மேற்கண்ட விசயங்களில் வெளிப்படுகிறது. ஆனால் தான் சொன்ன விஷயம் தவறு எனத் தெரிந்த பின்னும் அதை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டு அதற்காக மக்களை திரட்டி மண்ணடியில் விளக்கக் கூட்டம் எனும் பெயரில் வீண் விரயம் செய்து, விதண்டாவாதம் செய்வதில் இருந்து  அண்ணின் குணம் வெளிப்படுகிறது! மொத்தத்தில் நேற்றைய விளக்கக் கூட்டத்திற்கு அண்ணன் பாணியில் மார்க் போட்டால் வெறும் முட்டை! 

No comments:

Post a Comment