ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Tuesday, July 3, 2012

பணிநியமன ஆணை; தன்னைத் தானே பொய்யனாக்கி கொண்ட அண்ணன்.


தற்காலிக மருத்துவர் பணிநியமன விசயத்தில் அண்ணன் மண்ணைக்கவ்விய  காட்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறோம். இந்த பணிநியமன விசயத்தில் அண்ணன் அளவுக்கு அந்தர்  பல்டிகளை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதிகள் கூட செய்யமுடியாது. இவர் அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சிய அரசியல்வாதியாக இருக்கிறார். 

1349 பேர் பணி நியமனம் செய்யப்பட்டார்கள் என்றார். அது பணி நியமனம் அல்ல; வெறும் கவுன்சிலிங்கு தான் என்று ஜவாஹிருல்லாஹ் உரிய சான்றுகளுடன் நிரூபித்தவுடன், பணிநியமனம் என்ற தனது புராணத்தை விட்டுவிட்டு கவுன்சிலிங் என்று பல்டியடித்தார்.
1349 பேர் பணிநியமனத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்றார். ஆனால் 52 முஸ்லிம்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரத்துடன் ஜவாஹிருல்லாஹ் வைத்தவுடன், ஜவாஹிருல்லாஹ் சொன்னால் நம்பமாட்டேன்; அரசாங்கம் சொல்லவேண்டும் என்றார். அரசு சார்பில் மருத்துவ துறை அதிகாரி அளித்த விளக்கத்தில் 52 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை கூறியவுடன் மூர்ச்சையானார்.

இந்த பணியிடங்களை நிரப்புவது யார் என்றே தெரியாமல், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் முற்றுகை என்றார். பின்பு இந்த பணி நியமனங்களை செய்வது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அல்ல; மருத்துவ கவுன்சில் தான் என்று சொல்லி, இவர்கள் போராட்டம் மட்டு; இவர்கள் போராடிய இடம்கூட முட்டாள்தனமானது என்று ஜவாஹிருல்லாஹ் நிரூபித்தார். உடனே கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத குறையாக, மருத்துவ கவுன்சில் சிறப்பு அனுமதியை பெற்று இந்த பணி நியமனத்தை செய்துள்ளது. இதை அரசு எங்களிடம் சொல்லாததால்{!} நாங்கள் முட்டாள் தனமாக பணியாளர் தேர்வாணையம் முன்பாக முற்றுகை என்று சொல்லிவிட்டோம் என்று சொல்லி கம்பி நீட்டினார்.

இப்போது இன்னும் சில விசயங்களை பார்ப்போம்;

1349 பேர் என்று சொல்லித்திரியும் அண்ணன், அவரையும் அறியாமல் 3787 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டார்கள் என்று சொல்லி, தான் சொன்ன 1349 பேர் என்பது பொய் என்பதை ஓப்புக்கொண்டு தன் முகத்தில் தானே கரி பூசிக்கொண்டார். இதை மறைக்க, ஜனவரி வரை 2438 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் 88 முஸ்லிம்கள் பங்குபெற்றனர். ஆனால் மார்ச்சில் இரண்டு கட்டமாக நடந்த 1349 பேர் கவுன்சிலிங்கில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று கூறி திசை திருப்புகிறார். உண்மையில் இவரைப்போல அறியாமை எவருக்கும் இருக்காது. 

அண்ணனுக்கும் அவரது தம்பிகளுக்கும் வெளங்குற மாதிரி சொல்லனும்னா, இப்ப அண்ணன் ஜமாஅத்தில் தக்லீதுகள் பணிக்கு 885 பேர் தேவை என்று அண்ணன் அறிவிக்கிறார். இந்த தக்லீதுகளில் தொண்டியை  சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்  என்று அறிவிக்கிறார். அதற்கான விண்ணப்பங்களை வாங்கியவர் பல்வேறு கட்டமாக கவுன்சிலிங் நடத்துகிறார். அந்த தக்லீது கவுன்சலிங்கில் முதல் கட்டமாக நடந்த கவுன்சலிங்கில் தொண்டியை சேர்ந்தவர்களை 24 பேர் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும், 28 பேர் போட்டியின் அடிப்படையிலும் அண்ணன் தேர்ந்தெடுக்கிறார். இரண்டாம் கட்ட கவுன்சிலிங் பட்டியலை அண்ணன் வெளியிடும்போது, தொண்டியை அல்லாமல், வேறு ஊரை சேர்ந்தவர்களை அழைக்கிறார். தொண்டி  நபர்கள் பெயர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் தொண்டியை சேர்ந்தவர்கள் அண்ணனின் வீட்டை முற்றுகையிட்டால் அதை அண்ணன் சரிதான் என்பரா? இல்லை. அட கூமுட்டைகளா! உங்க ஊரு ஆளுகளத்தான் ஏற்கனவே தேர்ந்தேடுத்துட்டேனே. இதுகூட உங்களுக்கு வெளங்காம முற்றுகையிட வந்துட்டீங்களா என்று கேட்பாரா? சிந்திக்க வேண்டும்.

இதில் இன்னொன்றையும் அண்ணன் தன்னையறியாமல் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பணி இடத்தில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறித்திரிந்த அவர், 88 முஸ்லிம்கள் கவுன்சிலிங்குக்காக அழைக்கப்பட்டதை  அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால் இந்த பணிநியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு என்று அண்ணன் சொன்னது பொய் என்று தெரிகிறதல்லவா? இப்போது அண்ணனிடம் நாம் கேட்பது.

இந்த 88 பெரும் முஸ்லிம்களா இல்லையா?

இவர்களில் 52 பேர் நியமிக்கப்பட்டது உண்மையா இல்லையா?

ஜனவரியில் நடந்த கவுன்சிலிங்கும், மார்ச்சில் நடந்த கவுன்சிலிங்கும் ஒரே பணிநியமனம் சம்மந்தப்பட்டதா இல்லையா?

இவ்விரண்டும் வெவ்வேறு பணிகளுக்கான கவுன்சிலிங் என்றால் அதற்கான ஆதாரத்தை அரசாணையை அண்ணன் காட்டத்தயாரா?

ஜனவரி-மார்ச் இரண்டு கவுன்சிலிங்கும் ஒரே பணி சம்மந்தப்பட்டது தான் என்றால் முதலில் நமது பங்கை வாங்கிய பின்னும், மறுபடியும் கையேந்துவது மற்றவர்களின் உரிமையை பறிப்பதாக ஆகாதா? 

இறுதியாக அண்ணன் அதலபாதளத்தில் மண்ணைக் கவ்வியதற்கான ஆதாரம் இதோ;

அண்ணன் என்ன சொல்லி வருகிறார்? 1349 பேர் பணிநியமனம் என்று. அந்த நியமன ஆணையை காட்டத்தயாரா என்று அண்ணனுக்கு சவால் விட்டோம். அய்யோபாவம்! பொய்க்கு ஏது ஆதாரம்? ஆனால் மொத்தப் பணியிடங்கள் வெறும் 835 தானே தவிர, 1349 அல்ல என்று நாம் சொன்னோம். அதை அண்ணன் தனது வாயாலேயே ஒப்புக்கொண்டு கேவலப்பட்டு மண்ணை கவ்வு கவ்வு என கவ்வி நிற்கும் அதிசயம் பாரீர்;
அபகரிக்கப்பட்ட வார இதழ் 16;44

சரி. அண்ணன் சொல்றத ஒரு பேச்சுக்கு சரியென்று கொண்டாலும் இது ஒன்றும்  நிரந்தரப் பணியல்ல. தற்காலிகமான ஒன்றுதான்.முறையாக மருத்துவர்கள் நியமிக்கப்படுகையில் இந்த தற்காலிக பணிநியமனம் பெற்றவர்கள் பதவி காலாவதியாகிவிடும் என்பதை அண்ணன் வெளியிட்டுள்ள அரசானை சொல்கிறது. இதுக்குப் போயி அண்ணன் பண்ற அழிம்பு அவருக்கே ஓவராத் தெரியலையா?

அண்ணன் இன்னும் உளறினால் மண்ணைக்கவ்விய காட்சிகள் தொடரும் ஓரிறை நாடினால்.

http://amaibbukal.blogspot.in/2012/07/blog-post.html

No comments:

Post a Comment