சமுகமே ஒன்று படு(ஒரு முறையாவது படியுங்கள்)-
செய்கு பாவலர் ஹாமீம்
சமுகமே ஒன்று படுசமுகமே ஒன்று படு
சரியான முடிவை இன்று எடு
அன்று நான்கு கூட்டமாய் இருந்தோம்
இன்று நாற்பதாய் வளர்ந்தோம்
எழுபத்து மூன்றை நோக்கி
எட்டு எடுத்து வைக்கின்றோம்
ஒரு பக்கம் வளர்ச்சி -இதனால்
ஒரு சிலருக்கு அலர்ச்சி
வளர்ச்சியை கண்டதனால் -இன்று
வான் வழித்தாக்குதல்கள்
கிளர்ச்சியைத் தூண்டி கிருத்துவம் செய்யும்
கிருத்துவப்படைகள்
தளர்ச்சியை உருவாக்க பொருளாதாரத்தடைகள்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு
ஆனால் செய்வதெல்லாம் இதற்கு மாற்று
யூதனின் பிடியில் இன்று யூஎஸ் எ
யூத்தாய் இருப்போரே யூகிப்பீர்
தூதரின் மார்க்கம் ஒழிக்க புதுப்புது உக்திகள்
தோதாய் வூடகப்பின்னனிகள்
வேதமழிக்க வருகுது கூட்டம்
வேதக்காரன் என்ற போர்வையில்
அணுப்புலத்தைக் காட்டி
மனுக்குலத்தை மிரட்டும்
ஆணவப்போக்கு இது
அன்புடன் வாழ்ந்தால் தீவிரவாதி
அணுவுடன் வந்தால் மிதவாதி
உலகம் எங்கோ செல்லுதடா -அணு
உலையில் போட்டுக்கொல்லுதடா
மனுக்குலமே மனமிருந்தால்
மறுகணமே ஒன்று படு
உனக்கெதிராய் படைக்கருவி
உனையழிக்க வரும் எதிரி
கணக்கில்லை உன்னுயிற்கு
காலமாகிக்கொண்டிருக்கு
பிணககுற்றது போதுமடா
பின்னிப்பினைந்திடடா
ஒன்றே இறைவன் என்று வாதிப்பதில்
என்றுமே நாங்கள் தீவிரவாதிகள்தான்
மனிதர்களை அளிக்கும் நீ கூறும்
அநீதத் தீவிரவாதிகள் அல்ல நாங்கள்
நாகாசாகியை நாசமாக்கியவன் யார்?
ஹிரோஷிமாவை அழித்த ஹீரோ யார்?
ஈராக்கை ஈராக்கியவன் யார்?
ஈரமற்று மக்களைக் கொன்றவன் யார்?
ஈரானை மிரட்டுபவன் யார்?
போர் என்று குலைப்பவன் யார்?
ஆப்கானை பாப்கானாய் ஆக்கியவன் யார்?
ஆளும் தாலிபானை அழ வைத்தது யார்?
ஓசை இல்லாமல் இருந்த ஒசாமாவை
ஆசை காட்டி ஊக்குவித்தது யார்?
இன்று
லிபியாவை லேவலாக்கி கடாபியைக்கொன்றாய்
லில்லாகி என்போரை இல்லாமல் செய்தாய்
ஒபாமாவே உன் வெறிக்கு
உம்மத்தா கிடைததின்று
ஏமனுக்கு எமனாகி எதிர்புரட்சி கொண்டுவந்தாய்
ஏகாதிபத்தியத்தை ஏற்றிடத்தூண்டுகின்றாய்
ஓமனுக்கும் உன் சூழ்ச்சி உருவாகுமிது திண்ணம்
ஒதுங்கிய கத்தரையும் அழிப்பது உன் எண்ணம்
ராமனுக்கும் ரகீமுக்கும் சண்டை இனி உன்னால் தான்
ராப்பகலாய் உன் முயற்ச்சி எங்களைக் கொல்வதற்கு
இத்தனைக்கும் மேலாய் இன்று
நம் கையில் ஆயுதம் இல்லை -அதனால்
நம்மவருக்கு ஆயிரம் தொல்லை .
புதுப்புது ஏவுகணைகள் நம்மிடம் இல்லை -இருந்தாலும்
புதுப்புது எதிர்கணைகள் நம்மார்கத்திற்கு எதிராக
அதனாலன்றோ
அணுவுலைகள் இல்லாத
அரபுலகம் அழிகிறது
அமெரிக்கனின் ஆயுதத்தால்
அதிர்ந்து அழுகிறது
அவனுக்கு ஒன்றென்றல்
நமக்கு ஒரு நூறு
அவனை எதிர்த்தால்
நம்மீது அவதூறு
தீன் குலத்தாரே
தெரிந்ததா வரலாறு
வான் மறை காக்க -இனி
நீ ஒரு வல்லூறு
வாளெடுத்துச் செல் முன்னே-இனி
நீ ஒரு அடலேறு
குர் ஆன் ஆளுக்கொன்று -இது எங்களுக்கு
குற்றம் இல்லா அணுக்குண்டு
ஆயத்துக்களை ஆயத்தம் செய்தால் போதும்
அது தான் எங்களின் ஆயுதங்கள்
காயமே இல்லாமல் காப்பாற்றும்-எங்கள்
காயம் காத்துக் களைப்பாற்றும்
அணு ஆயுதத்தை விட எங்களின்
ஆயத்துக்கள் பலமானவை
அணுவுலை என்ன ?
அல்லாஹ்வின் வுரைக்கு முன்னே!
வான்வூர்திகள் என்ன-எங்கள்
வான் மறைக்குப் பின்னால் தான்
ஏவுகணை என்ன -எங்கள்
ஏகனை விடவா வலிமை வாய்ந்தது
சாவுகளை வென்ற சமூகம் நாங்கள்
சரித்திரம் படைப்பதில் சாயாத் தூண்கள்
ஏகாதிபத்தியமே எகத்துவத்தோடு
என்றுமே உனக்கு முரண்பாடுதான்
ஆகாத காரியங்கள் பலசெய்து
அழித்து ஒழித்தாலும்
நோகாது எங்கள் மனம்-என்றும்
நுழையாது வேறு மதம்
ஆகாய வழியாக அணுக்குண்டு போட்டாலும்
ஆங்காங்கே எங்கள் உடல் சிதைந்தே போனாலும்
குவண்டனாமோவில் குற்றுயிராய் கிடந்தாலும்
துவண்டு விடமாட்டோம்-மார்கத்தை
தொலைத்து விடமாட்டோம்
மோதி நீ பார்த்தாலும் மொத்தமாய் அழித்தாலும்
ஆதி மார்க்கம் இஸ்லாத்தை அறுத்தெரியமாட்டோம்
சாகாது சன்மார்க்கம் சருகாகும் உன்மார்கம்
சார்ந்தது சாந்தி மார்க்கம் சத்தியம் என் மார்க்கம்
இத்தனையும் அறிந்தபின்னும்
இத்தரையில் எத்தர்களாய் என் சமூகம் இருந்துவிட்டால்
அத்தனைக்கும் அளவுண்டு -உன்னை
அடிப்பதற்கு ஆளுண்டு
சுன்னி என்றும் சியா என்றும்
சொன்னது போதுமடா
சுன்னா ஒன்றென்ற
சுலோஹம் உன்னதடா
எண்ணப்பலபிரிவு
என்றைக்கும் வேண்டாமடா
உன்னைப்பகுப்பதற்கு
உலகோர் வந்துவிட்டார்
உன்னிப்பாய் நீ கவனி
உள்ளுக்குள் பெரும் அவதி
ஒன்று பட முடிவெடு -இதனை
ஒன்றாக முடிவெடு
பிரிவை நீக்கப் பரிவைக் காட்டு-இதனைப்
புரியாதவர்க்கு விளக்கிக்காட்டு
அறிவைச் சொல்லி அன்பு புகட்டு
அழிவைத் தவிற்க அறிஉரை சொல்லு
நெறியைக் காட்டி நெருங்கச்சொல்லு
தனிதனிக் கூட்டத்தை தவிர்க்கச்சொல்லு
தீனிதுதானென்று தெளிந்திடச்சொல்லு
தீயவர் கூட்டத்தை தெரிந்திடச்சொல்லு
தூதர் வழியில் நடந்திடச்சொல்லு
ரசூலைச்சொல்லி வசூலைச்செய்தால்-அந்த
ராட்சசனை நீ கண்டு கொள்ளு
பேசிபேசியே பெரியவன் ஆனால் -அந்தப்
பொய்யனை நீயும் அறிந்துகொள்ளு
பேசிக்கானே ஒற்றுமை தவிர்த்தால் -அந்தப்
பெரியவனை நீ தவிர்ந்து கொள்ளு
லாஜிக் சொல்லி லாபம் அடைந்தால்
லாபகமாக அரசியல் சொன்னால்
பொய்யன் அவன் ஒரு அரைவேக்காடு
பின் செல்லாதே அவன் பின்னோடு
புளுகுப்பேச்சால் குலைந்துவிடாதே
புல்லுருவிகளுக்கு இடந்தராதே
ஒற்றுமை பேணிட மறந்துவிடாதே
ஓர்குலம் என்பதை துறந்துவிடாதே
கற்றவராகிட காலம் கனிந்திட
நற்றவர் போலே நாமும் ஆகிட
ஒற்றுமை பேணுவோம் -புது
உலகினைக் காணுவோம்
No comments:
Post a Comment