கடந்த 20 வருடங்களுக்குள் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்த்திற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம்.
சில புதிய கருத்துக்கள் கவர்ச்சியாக சொல்லப் பட்ட போது முஸ்லிம் பொதுமக்களும் இளைஞர்களும் அவசரப்பட்டு அந்த குழப்பங்களுக்குள் சிக்கிக் கொண்டதாகும்.
இன்று ஏராளமான முஸ்லிம்கள் அப்புதிய இயக்கங்களையும் அமைப்புக்களையும் ஏளனமாக, அவமானகரமானதாக பார்க்கின்றனர்.
முஸ்லிம் சமுதயாத்தை பிளவு படுத்தி அந்த சுகத்தில் இவ்வியக்கங்கள் குளீர்காய்வதை அறிந்து ஏன் இதில் இணைந்திருந்தோம் … முஸ்லிம் ஜமாத்துக்களிலிருந்து பிரிந்து செல்ல நமக்கு நியாயமான காரணம் எதுவும் இல்ல்யே! சில சின்ன சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றில்ருந்து நாம் ஒதுங்கியிருந்தால் போதுமே! இப்படி தனியாக அமைப்புக்களையும் பள்ளிவாசல்களையும் உருவாக்கி வேறு வேறு நாட்களில் பெருநாட்களையும் சிறப்பான நேரங்களையும் நாம்சீர்குலைத்திருக்க தேவையில்லையே இன்று இப்போது கவலைப் படுகிறார்கள். ஆனால் அதற்குள்ளாக காலம் கடந்து விட்டது.
அற்பர்கள் கூட தனி அமைப்பை உருவாக்கி முஸ்லிம் மஹல்லாக்களில் போட்டி பள்ளிவாசல்களை கட்டிக் கொண்டு குழப்பங்களை செய்து வருகின்றனர்.
நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களானால் இதற்கான காரணத்தை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு கால கட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களில் ஒரு பகுதியினரும் தீன் விச்யத்தில் நிதானமில்லாமல் போதிய அனுபவமில்லாமல் அவசரப்பட்டு அணி சேர்ந்ததாகும்.
குழப்பங்களின் சமயத்தில் கொஞ்சம் பொறுமையாக, குழப்பங்களில் இருந்து சற்று விலகி இருந்திருந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த பிளவுகளையும் அதன் பின்விளைவுகளையும் தவிர்த்திருக்க முடியும்.
சின்ன சின்ன விசயங்களை சொல்லி எவ்வளவு பெரிய பிளவை சமுதாயத்தில் உண்டுபண்ணப் பட்டது. விரல் அசைப்பதும் தொப்பி போடுவதும். துஆ ஓதுவதும், சமூக விரோதிகளால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளாக ஆக்கப் பட்டன. பிறகு அவர்களே எப்படி எல்லாம் இதில் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்?
ஜியாரத்தை அசிங்கமாக் சித்தரித்த டி என் டி ஜே வினர் இப்போது பெண்கள் ஜியாரத் செய்யலாம் இது தான் எங்களுடைய புதிய ஆய்வு என்கின்றனர்( ஏகத்துவம் 2012)
முஸ்லிம்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
அல்லாஹ் இந்த தீனை பாதுகாப்பாகவே வைத்திருக்கிறான். அவ்வப்போது சில புயல்கள் வீசலாம். அப்போது முஸ்லிம்கள் தமது இடத்தில் உறுதியாக நின்று கொள்வார்கள் எனில் குப்பைகளும் கூளங்களும் அவர்களை கடந்து சென்று விடும்.
கோவை அப்துல் அஜீஸ் பாகவி
No comments:
Post a Comment