ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Tuesday, July 3, 2012

அம்பலமானது ‎ம.ம.க.வின் ‎சமுதாய துரோகம்! ‎


செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, June 27, 2012, 21:54
‎1349 ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர்கள் கலந்தாய்வுக்காக ‎அழைக்கப்பட்டதில் ஒரு முஸ்லிமைக் கூட அழைக்காத தமிழக ‎அரசின் பச்சைத் துரோகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‎மாபெரும் முற்றுகைப் போராட்டத்தைக் கடந்த 14.06.12 அன்று ‎நடத்தியது.‎
சென்னையைக் கிடுகிடுக்க வைத்து, ஆட்சியாளர்களை அரள வைத்த ‎இந்தப் போராட்டத்தின் வாயிலாக அதிர்ந்து போயுள்ளது தமிழக அரசு. ‎தமிழக அரசின் துரோகத்தை வெளிக்கொண்டு வந்த தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் போராட்டத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் ‎கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ‎
இந்தப் போராட்டத்தின் வீரியத்தை அனைத்து மீடியாக்களும், ‎உளவுத்துறையும் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் ‎விளைவாக ஆளுங்கட்சி விழிபிதுங்க, சம்பந்தப்பட்ட மருத்துவர் ‎தேர்வாணையத்திற்கு பிரஷர் மேல் பிரஷர் பறக்க, நாமும் இது குறித்து ‎வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மருத்துவர் தேர்வாணையத்தையும் ‎உணர்வு வார இதழ் சார்பாக தொடர்பு கொண்டோம்.‎
சென்னை சாந்தோமில் உள்ள அரசு வேலைவாய்ப்பு பதிவு ‎அலுவலகத்தின் இணை இயக்குநர் அவர்களைச் சந்தித்து ஒப்பந்தப் ‎பயிற்சி மருத்துவர்கள் நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 1349 பேர்களில் ‎ஒரு முஸ்லிம் கூட அழைக்கப்படாததற்கான காரணம் என்ன என்று ‎கேட்கப்பட்டது.‎
முஸ்லிம்களுடைய பட்டியலை அவர்கள் கேட்காததால் நாங்கள் ‎வழங்கவில்லை:‎

அதற்கு பதிலளித்த அரசு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தின் ‎இணை இயக்குநர் அவர்கள், துறைவாரியாக ஆட்களை அரசு ‎வேலைவாய்ப்புகளில் நியமிக்கும் போது அந்தந்த சமுதாயத்தின் ‎இடஒதுக்கீட்டின் அளவுப் பிரகாரம் நியமிப்பது எங்களது பணி அல்ல ‎என்றும், முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் ‎பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் என்று எங்களிடத்தில் இன்ன இன்ன ‎பிரிவுகளில் இத்தனை இத்தனை ஆட்கள் தேவை என்று சம்பந்தப்பட்ட ‎துறையிலிருந்து கோரிக்கை விடுப்பார்கள். அவர்களது கோரிக்கை ‎அடிப்படையிலும், அவர்கள் கேட்கும் எண்ணிக்கையின் ‎அடிப்படையிலும்தான் நாங்கள் அரசு தேர்வாணையத்திற்கோ, ‎மருத்துவர் தேவாணையத்திற்கோ அல்லது இது போன்ற அரசு ‎தரப்பில் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் துறைக்கோதீ பட்டியலை ‎வழங்குவோம் என்றும், எங்களிடம் மருத்துவர் தேர்வாணையம் ‎முஸ்லிம்களுடைய பட்டியலைக் கேட்காததால் அதை நாங்கள் ‎வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.‎
வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் பட்டியல் தராததால் நாங்கள் ‎முஸ்லிம்களை அழைக்கவில்லை:‎
அரசு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தின் இணை இயக்குநர் ‎அவர்கள் கூறிய செய்திகளைச் சேகரித்த பிறகு, அதைத் தொடர்ந்து, ‎மருத்துவ தேர்வாணைய இயக்குனரான பொற்கைபாண்டியன் ‎அவர்களை உணர்வு வார இதழ் சார்பாக நமது செய்தியாளர் சந்தித்தார். ‎அவரிடத்தில் 1349 பேர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லாததற்கு ‎விளக்கம் கேட்ட போது, கடைசியாக கவுன்சிலிங் நடந்த தேதியான ‎மார்ச் 26 மற்றும் 27ஆகிய தேதிகளில் கவுன்சிலிங்கிற்கு ‎அழைக்கப்பட்ட பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம் பெறாததற்கு ‎உரியகாரணம், அரசு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்திலிருந்து மூப்பு ‎அடிப்படையில் பதிவு செய்த முஸ்லிம்களின் பட்டியல் எங்களுக்கு ‎வந்து சேரவில்லை என்பதுதான்.
அதுதான் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய ‎தேதிகளில் அழைக்கப்பட்டவர்களது பட்டியலில் முஸ்லிம்கள் யாரும் ‎இல்லாமல் போனதற்குக் காரணம் என்று பதில் கூறியுள்ளார். ‎
மேலும், முஸ்லிம்களின் மூப்பு பட்டியல் கலந்தாய்வு நடக்கும் ‎அன்றைய தினம்தான் மருத்துவ தேர்வாணையத்தின் கைக்குக் ‎கிடைத்ததால், அவற்றை 1349பேர் கொண்ட பட்டியலில் சேர்க்க ‎இயலவில்லை. இருப்பினும், அவற்றைச் சரி செய்து ஏறத்தாழ 50க்கும் ‎மேற்பட்ட முஸ்லிம்கள் அடங்கிய கலந்தாய்வு ஒன்றுக்கு ஏற்பாடு ‎செய்யப்பட்டுள்ளது.
அதன் நகலை உங்களுக்குத் தருகிறேன் என்றும் ‎மருத்துவ தேர்வாணைய இயக்குனரான பொற்கை பாண்டியன் ‎நம்மிடம் கூறினார்.‎
நமது செய்தியாளர் முன்னிலையிலேயே அதன் நகல் ஒன்றை இந்தப் ‎பத்திரிகையாளருக்கு கொடுங்கள் என்று கூறிய மறுகணமே அந்தப் ‎பட்டியல் தற்போது உங்களுக்குத் தரப்படமாட்டாது என்று ‎அந்தர்பல்டியும் அடித்துள்ளனர்.‎
மருத்துவத் தேர்வாணைய இயக்குனரான பொற்கை பாண்டியன் ‎அவர்களது வாக்குமூலத்தின் வாயிலாக முஸ்லிம்களுக்கு அவர்களது ‎பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படாமல் துரோகம் ‎இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தாங்கள் செய்த துரோகத்தை ‎சரி செய்ய 50 முஸ்லிம்கள் அடங்கிய புதிய பட்டியல் தயார் ‎நிலையில் உள்ளது என்றும் அவர் கூறியிருப்பது அதை மேலும் ‎உறுதிப்படுத்தியது.‎ ‎ ஆனால் கடைசி வரைக்கும் அந்த ‎முஸ்லிம்களின் பட்டியலை நம்மிடம் தர மறுத்து விட்டனர்.‎
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்காமல் திட்டமிட்டு ‎சதிசெய்து விட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது போராட்டத்தின் ‎வாயிலாக தமிழகத்தைப் புரட்டிப் போட்டவுடன், தங்களது இந்த ‎துரோகத்தை மறைக்க தற்போது சப்பைக்கட்டு காரணங்களைக் கூறி ‎வருவது இதன் வாயிலாக அம்பலமாகியுள்ளது.‎
அம்மாவுக்கு ஆதரவாக களம் கண்ட ம.ம.கட்சி:‎
ஜால்ரா தட்டுவதற்கென்றே அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி ‎அம்மாவுக்கு அடிமைச் சேவகம் செய்து வரும் ம.ம.கட்சியினர் ‎வழக்கம் போல இந்த விஷயத்திலும் போட்டிபோட்டுக் கொண்டு ‎அம்மாவுக்கு ஆதரவாக, அம்மாவின் ஆசியைப் பெற வேண்டும் ‎என்பதற்காக ஜால்ரா தட்டி வருகின்றனர். ‎
முதலில் எடுத்த எடுப்பிலேயே, 1349 பேரில் ஒரு முஸ்லிம் கூட ‎அழைக்கப்படாததற்கு காரணம், முஸ்லிம்கள் யாரும் ‎விண்ணப்பித்திருக்கமாட்டார்கள் என்று போலிக் காரணம் கூறினர். ‎அவர்களது முகத்திரையை ஆதாரங்களுடன் கிழித்தெறிந்தவுடன் மரம் ‎விட்டு மரம் தாவுவது போல முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட ‎அநீதிக்கு எதிராக ம.ம.ம.வினர் கண்டன அறிக்கை விட்டனர்.‎
அந்தக் கண்டன அறிக்கையில் சுகாதாரத்துறை முஸ்லிம்களுக்கு ‎மாபெரும் துரோகம் செய்துள்ளதாகவும், அதை வன்மையாகக் ‎கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ‎
அந்த அறிக்கை இதோ: ‎
click image to enlarge
மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு – தமுமுக ‎கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றத் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. ‎அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:‎
தமிழகத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 1349 மருத்துவர் ‎பணியிடங்களில் ஒரு மருத்துவரும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தை ‎சேர்ந்தவர் இல்லை எனத் தெரியவருகிறது. தமிழக அரசு ‎அறிவித்துள்ள 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1349 ‎மருத்துவர் பணியிடங்களில் 47 பணியிடங்கள் சிறுபான்மை முஸ்லிம் ‎இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் ‎பொதுப்பிரிவிலும் சிறுபான்மையின முஸ்லிம் இனத்தை சேர்ந்த ‎மருத்துவர்கள் ஒருவரும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ‎சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கான ‎இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என அதிமுக பொதுச் ‎செயலாளரும் தற்போதைய முதல்வரும் அறிவித்தார்கள். ‎இந்நிலையில் மருத்துவர்கள் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது ‎மிகவும் வருத்தமளிப்பதுடன் திட்டமிட்டு முஸ்லிம்கள் ‎புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் ‎கழகம் கருதுவதுடன் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இச்செயலை ‎தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.‎
தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு 3.5 ‎விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவர்களின் ‎பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற ‎கழகம் வலியுறுத்துகிறது.‎
அன்புடன்
‎(ப. அப்துல் சமது)‎
இந்த அறிக்கையைப் பார்த்தவுடன் தமுமுகவில் இன்னும் மிச்சமாக ‎உள்ள உணர்வாளர்கள் நீண்ட காலத்துக்குப் பின் மனமகிழ்ச்சி ‎அடைந்தனர்.
இப்போதாவது ஜால்ராக் கட்சி என்ற பெயரை மாற்ற நம் ‎இயக்கம் முன் வந்து துணிவாகக் கண்டித்துள்ளதே என்று அவர்கள் ‎சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நாள் ‎கூட நீடிக்கவில்லை.‎
ஆம்! அந்த அறிக்கை தமுமுக இணையதளத்தில் இருந்து வந்த ‎வேகத்தில் காணாமல் போனது.‎
காரணம், அந்த அறிக்கையை தமுமுக பொதுச் செயலாளர் ‎வெளியிட்டபோது “அகில உலக ஜால்ராக்களின் தலைவர்” என்ற ‎பட்டத்தை வெல்வதற்காக போராடும் ஜவாஹிருல்லா இந்தியத் ‎திருநாட்டில் இல்லை.
இந்தக் கண்டன அறிக்கையைப் பார்த்து ‎கொதித்துப் போன ஜால்ரா புகழ் ஜவாஹிருல்லா, “என்னடா இது ஒரு ‎வருடமாக கூழைக்கும்பிடு போட்டு அம்மாவின் மனதில் நான் ‎இடம்பிடிக்க பட்டபாடு எனக்கல்லவா தெரியும். ஒரே நாளில் அதை ‎நாசமாக்கி விட்டீர்களே!” என்று பொம்மை பொதுச் செயலாளருக்கு ‎டோஸ் விட்டு அந்த அறிக்கையை நீக்கி விட்டு தனது ‎அறிவுப்பூர்வமான(?) அறிக்கையை வெளியிட்டு ஆள்வோரைக் குளிர ‎வைத்துள்ளார்.‎
அந்தர்பல்டி அடித்த ம.ம.கட்சியினர் :‎
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சரியான அளவில் ‎இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்:‎
இழைக்கப்பட்ட துரோகத்திற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ‎போராட்டத்தை அறிவித்தவுடன் அரசியல் ஆதாயத்திற்காக கண்டன ‎அறிக்கை  வெளியிட்ட ம.ம.கட்சியினர், அதன் பிறகு ஆளும்கட்சியின் ‎பேரத்திற்கு அடிபணிந்து அவர்களுக்கு கூஜா தூக்கி நாரப் பிழைப்பு ‎நடத்தும் தொழிலை ஆரம்பித்தனர்.‎
எலும்புத் துண்டுகளுக்காக அலையும் நாய்களைப் போல, ஜெயலலிதா ‎உண்டது போக தனது கையில் வைத்துள்ள “வாரியப்பதவி” என்ற ஒரு ‎எலும்புத் துண்டுக்காக அதைப் பெற்றே தீருவது என்ற நப்பாசையில் ‎அந்த சின்னஞ்சிறு எலும்புத் துண்டுக்காகத்தான் இவர்கள் இந்த ‎அளவிற்கு அம்மாவிற்கு வாலை ஆட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.‎
இடஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ‎திட்டமிட்ட சதி என்று அறிக்கை வெளியிட்ட ம.ம.கட்சியினருக்கு, ‎அதிமுகவிடத்தில் பேரம் பேசி அந்த பேரம் படிந்தவுடனேயே அந்த ‎திட்டமிட்ட சதி என்ற குற்றச்சாட்டு அதோ கதி ஆகிவிட்டது.‎
ஆம்! திட்டமிட்ட சதி செய்துள்ளதாக குற்றம்சாட்டிய இரண்டு ‎நாளிலேயே தமிழக அரசு முஸ்லிம்களுக்கு எந்த துரோகமும் ‎செய்யவில்லை என்று அந்த துரோகத்தை மறைக்க திட்டம் தீட்டி ‎முஸ்லிம் சமுதாயத்திற்கு பச்சைத் துரோகத்தைச் செய்து தாங்கள் ‎சமுதாய துரோகிகள்தான் என்பதைத் தெள்ளத் தெளிவாக அடையாளம் ‎காட்டியுள்ளனர் இந்த ம.ம.கட்சியினர்.‎
தமிழக அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்ற ரீதியில் ஒரு ‎அறிக்கை ம.ம.கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டது.‎
அப்படியானால், ‎
• இதற்கு முன்னர் அப்துல் சமது அவர்கள் பெயரில் கண்டித்து ‎அறிக்கை வெளியிட்டார்களே! ‎
• திட்டமிட்ட சதி என்று சொன்னார்களே!‎
• தமுமுக வன்மையாகக் கண்டிப்பதாகச் சொன்னார்களே!‎
• இதில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு ‎வருத்தமளிப்பதாக சொன்னார்களே!‎
அதுவெல்லாம் என்னவாயிற்று; அந்த  கண்டன  அறிக்கை ‎என்னவாயிற்று  என்று கேட்கின்றீர்களா? அது அம்பேலாகிவிட்டது.‎
மூத்த(ரத்) தலைவரின் அறிக்கை வெளியிடப்பட்டதும் ம.ம.கவின் ‎பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்களின் கண்டன அறிக்கை ‎காணாமல் போய்விட்டது!‎
காணவில்லை ஐயா காணவில்லை ம.ம.கட்சியின் கண்டன ‎அறிக்கையை காணவில்லை:‎
தற்போது ம.ம.கட்சி முதலில் வெளியிட்ட அந்தக் கண்டன அறிக்கை ‎காணாமல் போய்விட்டது. அந்த அறிக்கையை கண்டுபிடித்துத் ‎தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்போடு ‎ஈமெயில்கள் பறந்த வண்ணம் உள்ளன.‎
வழக்கம் போல தங்களது இணையதளத்திலிருந்து அந்த அறிக்கையை ‎தூக்கிவிட்டனர் இந்த துரோகிகள்.‎
பைலாவையே தூக்கியவர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் :‎
இதற்கு முன்பாக ம.ம.கட்சி அரசியலில் போட்டியிடும் முடிவை எடுத்த ‎போது, அரசியல் கட்சியில் பதவி வகித்தால் தமுமுகவில் உள்ள ‎பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். அது செல்லுபடியாகாது என்ற ‎தமுமுகவின் பைலாவை மேற்கோள்காட்டி சகோதரர் பீஜே அவர்கள் ‎பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
அந்தப் பொதுக்கூட்டத்தில் ‎உங்களது இயக்கத்தின் உறுப்பினர்களை வைத்தே உங்களது ‎பைலாவின் அடிப்படையில் நீங்கள் வகிக்கும் இந்தப் பதவி செல்லாது ‎என்று வழக்குத் தொடுப்பேன் என்று பீஜே சொன்ன மறுநாள் ‎அவர்களது இணையதளத்திலிருந்து தமுமுகவின் பைலாவையே ‎தூக்கிவிட்ட புண்ணியவான்கள்(?) தானே இவர்கள்.‎
தங்களது பதவி சுகத்திற்காக இயக்கத்தின் பைலாவையே தூக்கி வீசிய ‎இந்த நயவஞ்சகர்களுக்கு, இந்தக் கண்டன அறிக்கையை தூக்கி ‎எறிவதெல்லாம் சும்மா ஜுஜுபி மாதிரிதானே!.பைலாவையே தூக்கி ‎வீசிய எங்களுக்கு, இதெல்லாம் சர்வசாதரணமய்யா என்று ‎ம.ம.கட்சியினர் சொல்வது உங்களுக்குக் கேட்கின்றதா?‎
முட்டுக்கொடுப்பது எப்படி? :‎
இப்போது சமுதாய துரோகத்தை ஆதரிக்கும் சமுதாய துரோகிகளின் ‎அறிக்கையை வாசிப்போம்.‎
அம்மாவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இது குறித்து ம.ம.கவின் ‎மூத்த(ரத்) தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்ட ‎அறிக்கை குறித்து வரிக்கு வரி நாம் இங்கு அலசுவோம்.‎
தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை ‎துரோகம் செய்ததா? – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ‎விளக்கம் என்று ஆரம்பிக்கின்றது அந்த ஜால்ரா அறிக்கை.‎
“தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் ‎பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ‎ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் ‎தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் ‎முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை ‎வெளியிட்டனர்.
இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் ‎பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு ‎போராட்டம் கூட நடத்தியது”
என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎போராட்டத்தை இழிவுபடுத்தியுள்ளார் ஜால்ரா தலைவர்.‎
முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீனும், முன்னாள் முதல்வர் ‎கருணாநிதியும் சொன்ன செய்தியை உண்மை என்று நம்பி, அதை ‎ஆய்வு செய்யாமல் அப்படியே அடிபிசகாமல் அதையே சொல்லி ‎போராட்டம் நடத்தினோம் என்று குற்றச்சாட்டு சொல்லும் இந்த மூளை ‎வரண்ட வாத்தியாருக்கு மண்டையில் ஏதேனும் சரக்கு உள்ளதா? ‎அல்லது அது வெறும் வெற்றிடமாக உள்ளதா? என்பது நமக்குச் ‎சந்தேகமாக உள்ளது.‎
கே.எம். காதர் மைதீன் சொன்னது என்ன? :‎
நாம் மேற்கண்டவாறு சொல்லக் காரணம் என்னவெனில், முஸ்லிம் ‎லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் இது குறித்து ஒரு ‎தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, “1349 பேர்களில் ‎ஒரு முஸ்லிம் கூட அழைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு ‎சொல்கின்றீர்களே! இந்தக் குற்றச்சாட்டை தாங்கள் ‎பத்திரிக்கையாளர்களிடத்தில் சொல்வதற்கு முன்னால் அதைத் தீர ‎விசாரித்தீர்களா? அதை ஊர்ஜிதம் செய்தீர்களா?” என்ற கேள்வியை ‎அவரிடத்தில் எழுப்பியபோது, “அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. 1349 ‎பேர்களில் ஒரு முஸ்லிம் கூட அழைக்கப்படவில்லை என்ற செய்தி ‎சமுதாயப் பெரியவர்கள் மூலமும், வேறு சிலர் மூலமும் ‎கேள்விப்பட்டேன். அதைத்தான் நான் சொன்னேன்” என்று கூறி தனது ‎அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதியின் குரல் என்ற பெயரில் ‎நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் ஜால்ரா தலைவரும் கலந்து ‎கொண்டார். அவர் காதுக்கு கேட்கும் வகையில் காதர் மைதீன் ‎மேற்கண்டவாறு தெரிவித்து விட்டார்.
தவ்ஹீத் ஜமாஅத் தக்க ‎ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டுதான் களமிறங்கியது; இது ‎குறித்து எந்த விபரத்தையும் திரட்டிக் கொள்ளாத காதர் மைதீனைப் ‎பின்பற்றிப் போராடவில்லை என்பது ஜால்ரா தலைவர் ‎முன்னிலையில் நிரூபணமானது.‎
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர் சொன்னதை ‎நம்பிக்கொண்டு, குருட்டுத்தனமாக போராட்டத்தை நடத்தவில்லை. ‎மாறாக இதற்கு முன்பாக இந்த ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் ‎பணியிடங்களுக்கு எத்தனை பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள். அதில் ‎எத்தனை பேர் முஸ்லிம்கள்?. அது போல இப்போது எத்தனை பேர் ‎அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அதில் எத்தனை பேர் முஸ்லிம்கள் என்பன ‎உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டும், ‎அதுமட்டுமல்லாமல், பணி மூப்பு அடிப்படையிலும், முஸ்லிம் என்ற ‎அடிப்படையிலும் முன்னதாகவே அழைக்கப்பட வேண்டிய முஸ்லிம் ‎சகோதரர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதற்கான அனைத்து ‎ஆதாரங்களையும் கையில் திரட்டி வைத்துக் கொண்டும் தக்க ‎காரணத்தோடுதான் இந்தப் போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் ‎நடத்தியது.‎
இவ்வளவு புள்ளிவிபரங்களையும் கையில் வைத்துக் கொண்டு ‎போரட்டம் நடத்தியதை அம்மாவிடத்தில் கிடைக்கும் எலும்புத் ‎துண்டுக்காக கொச்சைப்படுத்தும் வாத்தியாரின் இழிசெயலை ‎என்னவென்பது? ‎
தறுதலை அமைப்பு என்ற பட்டத்தை தனது அமைப்புக்கு “தானே” ‎சூட்டிக்கொண்ட “தானே” புயல் தலைவர்(?):‎
சரி! காதர் மைதீன் சொன்ன விஷயத்தை அப்படியே நம்பி அது ‎உண்மை என்று ஆய்வு செய்யாமல் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் ‎நடத்தி அது தறுதலை அமைப்பாக மாறிவிட்டதாக சொல்லும் ‎வாத்தியார் அவர்களே! நாங்கள் ஆய்வு செய்து ஆதாரங்களை ‎வைத்துக் கொண்டுதான் போராட்டம் நடத்தினோம் என்று ‎புள்ளிவிபரங்களுடனும், ஆதாரங்களுடனும் தெளிவுபடுத்தியுள்ளோம். ‎
ஆனால், நாங்கள் எந்தக் காரணத்திற்காக போராட்டம் நடத்தினோமோ ‎அதே காரணத்தைச் சொல்லி, இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் ‎திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தமுமுக பொதுச் ‎செயலாளர் அறிக்கை வெளியிட்டது எப்படி? அதிலிருந்து, ஜால்ராவின் ‎சொல்பிரகாரம் ம.ம.கட்சிதான் தறுதலை அமைப்பு என்பது உறுதியாகி ‎விட்டதல்லவா?‎
உங்களது தரங்கெட்ட கட்சிக்கு தறுதலை அமைப்பு என்ற ‎பட்டத்தையும் நீங்கள் தற்போது சூட்டியுள்ளது மிக்க மகிழ்ச்சி!‎
அடுத்தபடியாக கூறுகெட்ட வாத்தியாரின் கூடுதல் விளக்கத்தை கீழே ‎காண்போம் : ‎
புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் ‎இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் ‎இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் ‎தொலைபேசியில்  தொடர்பு கொண்டு கேட்ட போது அப்படி இருக்க ‎வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் ‎விசாரித்து வந்ததும் தகவல் தருவதாகக் கூறினார்.
இதன் பிறகு ‎அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் ‎மருத்துவத் துறைக்கு 10A1 விதிமுறையின் படி ஜனவரி 20முதல் மார்ச் ‎‎27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் ‎செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான ‎இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24மருத்துவர்களும் திறந்த ‎போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் ‎செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக ‎தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம்.‎
‎ ‎
புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் ‎அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.‎
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு ‎அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் ‎கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. ‎அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ‎ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். ‎அப்போது அமைச்சர் 688மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் ‎செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை ‎நாம் ஆய்வு செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் ‎அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் ‎கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் ‎இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் ‎முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் ‎வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வு செய்யாமல் முற்றுகைப் ‎போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று ‎அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் ‎என்பதை அறிய முடிந்தது”‎
என்று தாங்கள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகத்தை ‎மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் எழுதிக் கொடுத்த அறிக்கையை ‎தனது பெயரில் வெளியிட்டு அடிமைச் சேவகம் செய்துள்ளார் தானே ‎புயல் புகழ் வாத்தியார்.‎
கேப்பையில் நெய்வடிகின்றது என்றால் கேட்பாருக்கு எங்கே போனது ‎அறிவு :‎
மேற்கண்டவாறு தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள். அதைப் போல ‎ஜால்ரா புகழ் வாத்தியார் எதை வேண்டுமானாலும் சொல்லி ஜால்ரா ‎தட்டினால் அதை அனைத்தையும் தலையாட்டிக் கேட்டுக் ‎கொண்டிருக்க முஸ்லிம் சமுதாயம் ஒன்றும் ம.ம.கட்சியின் கலகக் ‎கண்(ணில்லாத)மணிகள் போன்றவர்கள் அல்ல.‎
ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக ‎நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட ‎முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 ‎மருத்துவர்களும், திறந்த போட்டியில் 28 மருத்துவர்களும் நியமனம் ‎செய்யப்பட்டதாகவும், மக்கள் நல்வாழ்வு துறையின் இணையதளத்தில் ‎தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் ‎கலந்தாலோசனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் ‎வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் ‎இடம்பெற்றிருந்தன.
இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் ‎இது நியமனம் பெற்றவர்களின் பட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான ‎பட்டியல்தான். இந்தப் பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ‎ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 ‎கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். ‎அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்தப் பட்டியலில் இல்லை ‎என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் ‎மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் ‎செய்யப்பட்டு விட்டார்கள. ‎
இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு ‎இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் ‎சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். ‎இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 ‎மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற ‎கலந்தாய்வில் பங்கு கொண்டார்கள்.
இவர்களில் கலந்தாய்வுக்கு ‎மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு ‎‎688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை ‎நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கம் ‎இதோ” என்று கூறி 52 முஸ்லிம்களின் பட்டியலை அம்மாவின் ‎அடிவருடும் அறிக்கையில் கூறி முஸ்லிம் சமுதாயத்தின் காதில் ‎பூசுற்றுகின்றது ஜவாஹிருல்லாஹ் என்ற சட்டமன்ற ஜனாஸா.‎
இந்த சட்டமன்ற ஜனாஸா சொல்லும் சங்கதி உண்மைதானா என்பதை ‎நாம் இப்போது அலசுவோம்.‎
மருத்துவர் தேர்வாணையம் மற்றும் தமிழக தேர்வாணையம் போன்ற ‎அனைத்து அரசு நிறுவனங்களும் தங்களது காலி இடப்பணி விபரங்கள் ‎மற்றும் அதற்கு தேர்வு செய்யப்படுவோருடைய பட்டியல்களைத் ‎தங்களது இணையதளத்தில் வெளியிடும். அதுதான் அதிகாரப்பூர்வ ‎அறிவிப்பாகக் கருதப்படும்.‎
பயிற்சி ஒப்பந்த மருத்துவர்களை நியமனம் செய்ய தமிழக அரசு ‎தேர்வாணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்ற, “மக்கள் நல்வாழ்வுத் ‎துறை”யின் இணையதளத்தில் இன்று வரை எந்தெந்த பணிகளுக்கு ‎எத்தனை பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்; அந்தந்த குறிப்பிட்ட ‎பணிகளுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் ‎முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. ‎
ஆனால், ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் நியமனத்தில் இது வரை ‎எத்தனை நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் ‎இதுவரை வெளியிடப்படவில்லை. அதில் அழைக்கப்பட்டிருந்த ‎பட்டியலின் அடிப்படையிலும், அதை ஆதாரமாக வைத்தும்தான் நாம் ‎மருத்துவ தேர்வாணைய இயக்குனரான பொற்கை பாண்டியன் ‎அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களுக்கு இப்படி துரோகம் ‎இழைக்கப்பட்டுள்ளதே என்று கேட்ட போது, செய்வதறியாது விழித்து, ‎தங்களது தரப்பில் தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக்கொள்ளாமல், ‎எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் முஸ்லிம்களின் ‎மூப்புப் பட்டியலை வழங்கவில்லை என்று கூறி அரசு வேலைவாய்ப்பு ‎பதிவு அலுவலகத்தின் மீது பழியைத் தூக்கிப் போட்டார். அப்படி ‎இருக்கையில் அம்மாவைப் பாதுகாக்க புதிய ஜோடிக்கப்பட்ட கணக்கை ‎வாத்தியார் வெளியிடுகின்றார். ‎
ஜால்ரா தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கட்டம் கட்டி வெளியிட்ட ‎விபரம், “மக்கள் நல்வாழ்வுத் துறை”யின் இணைய தளத்தில் ‎வெளியிடப்படவில்லை. அந்த ஜனாஸா குறிப்பிட்ட அந்தச் ‎செய்திக்கான எந்த ஆதாரத்தையும் காட்டாமல், அதற்கான ‎அரசாணையையும் காட்டாமல், தான்தோன்றித்தனமாக அவராக ஒரு ‎கட்டம் கட்டி, அதில் நம்பர்களைப் போட்டு வெளியிட்டுவிட்டு மக்களை ‎ஏமாற்றப் பார்க்கிறார்.‎
அவர் வெளியிட்ட பட்டியலில் உள்ள விபரங்கள் இதை எழுதும் ‎இன்றைய தேதி  வரை மக்கள் நல்வாழ்வுத் துறை”யின் ‎இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.‎
“மக்கள் நல்வாழ்வுத் துறை”யின் இணையதளத்தில் ஜனவரி 20 முதல் ‎மார்ச் 27 வரை பயிற்சி ஒப்பந்த மருத்துவப்பணிக்காக அழைக்கப்பட்ட ‎மருத்துவர்களின் முழுப் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. அதை ‎அப்படியே தேதிவாரியாக கீழே தருகின்றோம். ‎
“மக்கள் நல்வாழ்வு துறை”யின் இணையதளம் தரும் சரியான கணக்கு ‎இதோ கீழே: ‎
இதுதான் உண்மையான நல்லகணக்கு :‎
‎1. 20.01.2012 – ஆம் தேதி 191 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். (இது பொது ‎பிரிவு. இதை நாம் கணக்கில் கொள்ள தேவை இல்லை)‎
‎2. 23.01.2012 – ஆம் தேதி 924 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ‎
‎3. 24.01.2012 – ஆம் தேதி 846 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ‎
‎4. 25.01.2012 – ஆம் தேதி 668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ‎
அதாவது 23.01.2012 முதல் 25.01.2012 வரை மொத்தம் 2438 பேர் ‎அழைக்கப்பட்டுள்ளனர்.‎
ஜனவரி மாதம் நடத்தப்பட்ட இந்தக் கலந்தாய்வில் மொத்தம் ‎அழைக்கப்பட்ட 2438 பேரில் 88 பேர் முஸ்லிம்கள் இடம் பெற்று ‎இருந்தனர். 3.5 சதவிகிதம் இதில் முஸ்லிம்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ‎இதைக் குறை கூற முடியாது. ‎
ஆனால் மார்ச் மாதம் அழைக்கப்பட்ட பட்டியலில்தான் ஒரு முஸ்லிம் ‎கூட இல்லை. அந்தப் பட்டியல் விபரம்
இதுதான்.‎
‎5. 26.03.2012 – ஆம் தேதி 677 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ‎
‎6. 27.03.2012 – ஆம் தேதி 672 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.‎
இந்த இரண்டு நாட்களும் மொத்தம் 1349 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ‎அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ‎
கலந்தாய்வுக்கு ஒரு முஸ்லிமைக்கூட அழைக்காவிட்டால், பிறகு ‎எப்படி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இவர்கள் ‎வழங்குவார்கள்?‎
இதுதான் நம்முடைய குற்றச் சாட்டு.இதை சம்பந்தப்பட்ட அரசு துறை ‎அதிகாரிகளே ஒப்புக்கொண்டால் கூட வாத்தியார் மட்டும் அதை விட்டு ‎வைப்பதாகத் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் இந்த சமுதாய ‎துரோகிகளின் உண்மை முகம் பளிச் சென்று வெளியில் தெரிகின்றது.‎
வாத்தியார் வெளியிட்ட கள்ளக்கணக்கு:‎

இந்த பட்டியலில்
அ.20-1-2012ல் 191 பேர் அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது ‎மட்டும் உண்மை. இந்த விபரம் மக்கள் நல்வாழ்வுத்துறை ‎இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.‎
ஆ. 21-1-2012ல் 928 பேர் அழைக்கப்பட்டதாக ஜால்ரா புகழ் ‎ஜவாஹிருல்லா கூறுகிறார். ஆனால் இந்த தேதியில் எந்தக் ‎கலந்தாய்வும் நடந்ததாக சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் ‎குறிப்பிடப்படவில்லை.‎
928பேர் அதில் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படவில்லை. 191 பேர் ‎அழைக்கப்பட்டதை இணைய தளத்தில் வெளியிட்ட மக்கள் ‎நல்வாழ்வுத்துறை, இவ்வளவு எண்ணிக்கையில் நடந்த கலந்தாய்வை ‎எப்படி வெளியிடாமல் இருக்கும்? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ‎இல்லாத ஒரு தேதியையும், அந்த எண்ணிக்கையையும் அப்படியே ‎வெளியிட்டு மக்களை மூடர்களாக்க நினைத்துள்ளார் என்பது இதில் ‎இருந்து உறுதியாகின்றது. ‎
இ.22-1-2012ல் 846 பேர் அழைக்கப்பட்டதாக இவர் கட்டம் கட்டியுள்ளார். ‎ஆனால் இந்த தேதியில் எந்தக் கலந்தாய்வும் நடந்ததாகவோ, இந்த ‎எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு அழைப்பு அனுப்பியதாகவோ எந்த ‎அறிவிப்பும் சம்மந்தப்பட்ட துறை சார்பில் அதிகாரப்பூர்வ இணைய ‎தளத்தில் சொல்லப்படவில்லை. இதற்கான எந்த ஆதாரத்தையும் ‎ஜால்ரா தலைவர் வெளியிடவில்லை.‎
ஈ. 23-1-2012ல் 807 பேர் அழைக்கப்பட்டதாக ஜால்ரா தலைவருக்கு வஹீ ‎வந்துள்ளது போலும். ஆனால் சம்மந்தப்பட்ட துறை மூலம் ‎வெளியிடப்பட்ட பட்டியலில் 924 பேர் என்று பெயர்களுடன் பட்டியல் ‎வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுவும் தவறான தகவல்தான். ஜால்ரா ‎அடிப்பதற்காக இவருக்கு எழுதிக் கொடுத்த விபரத்தையும் ‎அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க ‎வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் போய்விட்டதா?‎
என்னய்யா நீ தரும் விபரமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ‎விபரமும் ஒன்றுக் கொன்று முரண்படுகிறதே என்று கேட்கும் அறிவு ‎கூடவா இல்லாமல் போய் விட்டது? ‎
உ.22-3-2012ல் 1700 பேர் அழைக்கப்பட்டதாக ஜால்ரா மன்னன் ‎வெளியிட்டுள்ள செட்டப் பட்டியல் கூறுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ ‎இணைய தளத்தில் இந்த தேதியில் 1700 பேர் அழைக்கப்பட்டதாக ‎கூறப்படவில்லை. வேறு தேதியிலும் இந்த எண்ணிக்கையில் ‎அழைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. இது ஆதாரமில்லாமல் ‎வெளியிட்ட செட்டப் செய்தியாகும்.‎
ஊ.26-3-2012ல் 687 பேர் அழைக்கப்பட்டதாக ஜால்ரா தலைவர் ‎கூறுகிறார். ஆனால் இணைய தளத்தில் 677 பேர் என்று பெயர் ‎பட்டியலுடன் உள்ளது. கூடுதலான அந்தப் பத்து பேர் யார் ‎என்பதையும், ஏன் அவர்கள் பெயர் விடுபட்டுள்ளது என்றும் திருப்பிக் ‎கேட்டு இருந்தால் இது ஜோடிக்கப்பட்டு நம்மிடம் தரப்படுகிறது என்று ‎ஜால்ரா மன்னனுக்குப் புரிந்திருக்கும்.‎
எ.27-3-2012ல் 697 பேர் அழைக்கப்பட்டதாக இந்த ஜனாஸா வெளியிட்ட ‎ஜால்ரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான ‎அறிவிப்பில் 672 பேர் என்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளதில் ‎மேலதிகமாக அழைக்கப்பட்டவர்கள் விபரம் என்ன? ஏன் அது குறித்து ‎இணைய தளத்தில் இல்லை? என்று கேள்வி கேட்டு இருந்தால், ‎‎”என்னமோ நடக்குது” என்று விளங்கி இருக்குமே? ‎
நாம் வெளியிட்ட அந்தப் பட்டியலை பெயர்களுடன் பார்க்க ‎விரும்புவோர் கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வமான ‎மக்கள் நல்வாழ்வுத்துறை வெப்சைட்டில் காணலாம். அதனுடன் ‎ஒப்பிட்டுப்  பார்த்து ஜால்ரா தலைவரின் தரங்கெட்ட ‎அடிமைத்தனத்தையும் பார்க்கலாம்.‎
http://tnhealth.org/More.html
ஜனாஸாவிற்கு மட்டும் இந்தப்பட்டியல் தெரிந்தது எப்படி?:‎
அப்படியானால், அரசு தரப்பிலிருந்து பேரம் பேசி சரிகட்டப்பட்டுத்தான் ‎இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது கண்கூடு. ‎
இந்தக் கணக்கில் நடந்துவிட்ட துரோகத்தை மறைக்கத் தான் தற்போது ‎அவசர அவசரமாக 52 பேர் பட்டியலை தேர்வு செய்யப்பட்டவர்களது ‎பட்டியல் என்று போட்டு வெளியிட்டுள்ளனர். ஆனால் அதை ‎அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடவில்லை.‎
இது குறித்து பதில் சொல்லக் கடமைப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை ‎ஜூன் 24 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.‎
அந்த அறிக்கையே தமுமுகவின் கள்ளத்தனத்தை அம்பலப்படுத்தும் ‎வகையில் அமைந்துள்ளது.‎
அந்த அறிக்கை இது தான்:‎
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ‎இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‎
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு ‎மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தொழிலாளர் ‎ஈட்டுறுதி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள மொத்தம் 835 ‎மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் வேலை ‎வாய்ப்பகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு நிரப்பிடுவதற்கு ‎‎2.1.12 அன்று ஆணை வெளியிடப்பட்டது. ‎
அவற்றுள் 682 எம்.பி.பி.எஸ். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட ‎வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1:5 விகிதாசாரப்படி ‎மருத்துவர்கள் பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டது. அதில் இனச் ‎சுழற்சி முறைப்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் ‎சார்ந்தவர்களுக்குரிய ஒதுக்கீடு 24 ஆகும். ‎
முதற்கட்டமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2448 ‎நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 88 பிற்படுத்தப்பட்ட ‎முஸ்லீம் நபர்களின் பெயரும் அடங்கும். ‎
ஜனவரி 20 மற்றும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பணி நியமன ‎கலந்தாய்வு நடத்திட திட்டமிட்டு 09.01.2012 அன்று அனைவருக்கும் ‎அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இணையதளத்திலும் பதிவு மூப்பு ‎அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது. ‎
அதனைத்தொடர்ந்து சில முஸ்லீம் சமுதாய மருத்துவர்கள் ‎இணையதளத்திலிருந்த பட்டியலிலுள்ள முஸ்லீம் நபர்களைவிட பதிவு ‎மூப்பு உடையவர்களாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை ‎அணுகியதைத் தொடர்ந்து, 20.01.2012 அன்று பதிவு தேதியின்படி 122 ‎பிற்படுத்ப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் தவறுதலாக விடுபட்டுள்ளது ‎என்று வேலைவாய்ப்பு அலுவலகத்திருந்து ஓர் பட்டியல் பெறப்பட்டது. ‎
அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பின்னர் வழங்கப்பட்ட ‎‎122 நபர்களும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 88 நபர்களைக் காட்டிலும் ‎பதிவு தேதியின் அடிப்படையில் முதுநிலை பெற்றவர்கள் என்பதால் ‎தந்தி வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும் ‎தெரிவிக்கப்பட்டது. ‎
ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட ‎முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் ‎நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொதுப் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக ‎அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் ‎சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ‎
மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 ‎பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 ‎வரையிலான) பணியில் சேர தேர்வு செய்ததின் பேரில் ‎காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. ‎
இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு ‎மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் ‎பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ‎பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய ‎தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் ‎இடம் பெற்று இருந்தனர். ‎
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட ‎முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் ‎இருந்தவர்களுக்குப் பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் ‎இப்பட்டியலில் இடம்பெறவில்லை. முதற்கட்ட பணிநியமன ‎கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான ‎இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 ‎நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் ‎வழங்கப்பட்டுள்ளது. ‎
எனவே மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி ‎நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை ‎கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இனச் சுழற்சி அடிப்படையில் ‎நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் ‎பணியிடங்கள் 52 ஆகும். ‎
இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ‎பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் ‎அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட ‎முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் ‎மேற்கொள்ளப்படும். ‎
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ‎
மேற்கண்ட அறிக்கையை நன்றாகக் கவனித்து வாசியுங்கள்.‎
முரண் ஒன்று :‎
ஜனவரி மாதம் 2438 பேர் அழைக்கப்பட்டதில் முஸ்லிம்கள் 88 பேர் ‎இருந்ததாகவும் ஆனால் அவர்களை விட முன்னர் பதிவு செய்த 122 ‎பேர் விடுபட்டு இருந்தது பின்னர் தெரிய வந்ததாகவும் இதன் பின்னர் ‎தந்தி மூலம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் ‎கூறப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் அழைப்பு அனுப்பிய 88 பேரை ‎விட இவர்கள் அழைப்பு அனுப்பாத 122 பேர் முன்னரே பதிவு ‎செய்துள்ளனராம். ஒருவர் இருவர் என்றால் தவறுகள் நடப்பதை ‎ஒப்புக் கொள்ளலாம். 122 பேர் முன்னரே பதிவு செய்திருந்தும் ‎அவர்களை அழைக்காமல் விட்டு விட்டு அவர்களுக்குப் பின்னால் ‎பதிவு செய்த 88 பேரை அழைத்து விட்டோம் என்று சொல்வதை ‎மூளையுள்ள யாரும் நம்ப முடியுமா? ‎
முன்னால் பதிவு செய்த 122 முஸ்லிம்கள் விடுபட்டது போல் வேறு ‎சமுதாயத்தினரில் ஏன் ஒருவர் கூட இப்படி விடுபடக் காணோம். இந்த ‎விபரங்கள் கணினியில் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனுக்குத்தான் ‎மதவெறி இருக்கும் என்றால் முஸ்லிம்களில் மட்டும் ‎தகுதியானவர்கள் 122 பேரை புறக்கணிக்கும் அளவுக்கு ‎கம்ப்யூட்டருக்கும் மதவெறி வந்து விட்டதா? அந்த அளவுக்கு ‎கம்ப்யூட்டருக்கும் மதவெறியை ஊட்டியுள்ளார்களா? ‎
அரசின் இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யப்பட்டதை ‎உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ‎
முரண் இரண்டு:‎
முதல் பாராவில் நியமிக்கப்பட வேண்டியவர்கள் 835 பேர் என்கிறது.‎
அதற்கு அடுத்த பாராவில் 682 பேர் நியமிக்கப்பட்டதாகவும் அதில் 3.5 ‎சதம் முஸ்லிம்களுக்கு 24 கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‎‎835ல் 682 போனால் மீதம் உள்ள இடங்கள் 153தான் இருக்கும்.‎
ஆனால் 9வது பாராவில் மீதமுள்ள 423 காலியிடங்கள் என்று இந்த ‎அறிக்கை கூறுகிறது.‎
‎835ல் 682 போனால் 423 வரும் என்பதில் இருந்து எதையோ செய்து ‎விட்டு மறைப்பதற்காக உளறுகிறார்கள் என்பது உறுதியாகின்றது. ‎
தமுமுகவின் கள்ளத்தனத்தை இதுவும் அம்பலப்படுத்துகிறது.‎
முரண் மூன்று:‎
ஏழாம் பாராவில் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டிய 24 இடங்களும் ‎கொடுத்து முடிக்கப்பட்டு விட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ‎கடைசி இரண்டு பாராக்களில் இன்னும் 52 இடங்கள் மீதம் உள்ளன. ‎முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை அதில் இருந்து ‎வழங்குவோம் என்று கூறப்படுகிறது. கொடுக்க வேண்டியதை ‎கொடுத்து விட்டது உண்மையா? அல்லது இனி மேல் கொடுப்பார்கள் ‎என்பது உண்மையா? ‎
முரண் நான்கு:‎
கடைசிக்கு முந்திய பாராவில் 371 இடங்கள் முஸ்லிமல்லாத ‎மக்களைக் கொண்டு நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 371ல் ஒரு இடம் ‎கூட முஸ்லிமுக்கு வழங்கப்படவில்லை என்பதும் இனி மேல்தான் ‎நம்முடைய போராட்டத்துக்குப் பிறகுதான் நியமிக்கப்படுவார்கள் ‎என்றும் கூறி, ஜால்ரா தலைவர் கூறியது அப்பட்டமான பொய் என்று ‎மக்கள் நல்வாழ்வுத்துறை அம்பலப்படுத்தி விட்டது. ‎
முரண் ஐந்து:‎
கீழிருந்து ஐந்தாம் பாராவில், “காத்திருப்போர் பட்டியலில் ‎வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் ‎மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு ‎செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்று ‎குறிப்பிட்டுள்ளனர். இதுவும் பொய்யாகும். ‎
உதாரணத்துக்கு நெல்லை ஹாஜா மைதீன் நவம்பர் 2011ல் பதிவு ‎செய்துள்ளார். இவருக்கு இடமளிக்காமல் இவருக்குபின் பதிவு செய்த ‎பாரதி ராஜனுக்கு (2012 ஜனவரியில் பதிவு செய்தவர்) அழைக்கப்பட்டது ‎எப்படி? முஸ்லிம்கள் முன்னரே பதிவு செய்யவில்லை என்பது ‎உண்மையானால் 2012ல் பதிவு செய்தவரை அழைத்து 2011ல் பதிவு ‎செய்தவரை விட்டது பச்சைத் துரோகம் இல்லாமல் வேறு என்ன? ‎
முரண் ஆறு: ‎
காலிப்பணியிடங்கள் இன்னும் 147 உள்ளதாக ஜால்ரா தலைவர் ‎சொல்கிறார். ஆனால் மேற்கண்ட அறிக்கையில் இன்னும் 52 பேர் தான் ‎என்று சொல்கின்றனர்.‎
முரண் ஏழு: ‎
இந்த விபரங்களை இது வரை இணைய தளத்தில் வெளியிடாமல் ‎எவ்வித விபரமும் இல்லாமல் அறிக்கையாக வெளியிட்டதும். ‎எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள் என்பதால் ஜால்ரா தலைவருக்கு ‎பொய்யான தகவல்களைக் கொடுத்தது ஏன்? ‎
தமிழக முதல்வரின் அதிகாரத்தை தனது கையிலெடுத்து அறிவிப்பு ‎செய்த வாத்தியார் :‎
ம.ம.கட்சியின் இந்த சமுதாய துரோகம் எந்த அளவிற்கு விரிந்து ‎பரந்து செல்கின்றது என்றால், தமிழக அரசு முஸ்லிம்களுக்கு துரோகம் ‎இழைத்துவிட்டதாக நாம் போராட்டம் நடத்தினால், அதற்கு தமிழக ‎அரசு தானே பதில் சொல்ல வேண்டும். மாறாக, முந்திரிக்கொட்டை ‎போல முந்திக்கொண்டு ம.ம.கட்சியின் சட்டமன்ற ஜனாஸா திருவாய் ‎மலர்ந்து பதில் தருகின்றது என்பதை வைத்து இவர்கள் எத்தகைய ‎சமுதாய துரோகத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பது ‎உறுதியாகின்றது. ‎
தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்திற்குப் பிறகு 688 ‎மருத்துவர்களுக்கான பணி நியமனத்தில் 52 முஸ்லிம்களை தமிழக ‎அரசு நியமித்து விட்டதாக ஜால்ரா மன்னன் அறிக்கை ‎வெளியிடுகின்றார். ‎
‎52 முஸ்லிம்கள் ஒப்பந்த மருத்துவர்களாக பணியில் நியமிக்கப்பட்டால் ‎அந்த அரசாணையை தமிழக அரசாங்கமல்லவா வெளியிட வேண்டும்? ‎இந்த கூஜா தூக்கிகள் ஏன் வெளியிட்டார்கள்? சம்பந்தப்பட்ட துறையின் ‎இணையதளத்திலே கூட இந்தப் பட்டியல் இல்லாதபோது இவர்கள் ‎மட்டும் இந்தப் பட்டியலை வெளியிடுகின்றார்கள் என்றால் அதன் ‎மர்மம் என்ன? ‎
அப்படியானால், தமிழக முதல்வரின் அதிகாரத்தை தனது ‎கையிலெடுத்து அறிவிப்பு செய்து தமிழக முதல்வர் அந்தஸ்துக்கு இந்த ‎ஜனாஸா சென்றுவிட்டதா? ‎
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்தப் பட்டியலை தங்களிடம் ‎தந்ததாக இவர்கள் நமது காதில் பூச்சுற்றுகிறார்கள். ‎
இவர்கள் வெளியிட்ட பட்டியல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ‎அளித்த பட்டியலாக இருக்குமேயானால், அதில் அரசாணை எண், ‎தமிழக அரசின் முத்திரையுடனனல்லவா இருக்க வேண்டும்.‎
சிறுகுழந்தைகள் கணக்கு நோட்டில் கிறுக்கி வைத்ததைப் போல ‎மேலும், கீழுமாக 52 பேர்களை எழுதிக் காண்பித்துவிட்டு இவர்களை ‎எல்லாம் தமிழக அரசுப் பணியில் நியமித்ததுள்ளது என்று நம்பவைத்து ‎மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள். 52 பேர் கொண்ட ‎பட்டியலில் உள்ள இவர்களை எல்லாம் என்றைக்கு தமிழக அரசு ‎பணியில் நியமித்தது என்பது குறித்த நியமன உத்தரவு ஆணையை ‎இவர்கள் வெளியிடத்தயாரா?‎
அவர்களை நியமித்த விஷயம் சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்குத் ‎தெரியுமா?‎
ஒரு பேச்சுக்கு 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது ‎உண்மையாக இருக்குமேயானால், அந்த நியமன உத்தரவுகளை இது ‎வரை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது ஏன்?‎
அதை தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்திய பிறகுதான் வெளியிட ‎வேண்டுமா?‎
அப்படியானால், ஒவ்வொரு துறையிலும் நியமிக்கப்பட்ட ‎முஸ்லிம்களின் பெயர் பட்டியலை அரசாங்கத்திடமிருந்து ‎பெறுவதற்கும், அரசாங்கமே அதை வெளியிட வைப்பதற்கும் ‎ஒவ்வொரு முறையும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த ‎வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா?‎
ஒரு பேச்சுக்கு 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது ‎உண்மையாக இருக்கும்பட்சத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ‎வீரியமிக்க போராட்டத்திற்குப் பிறகுதானே அவர்களை அவசர ‎அவசரமாக நியமித்து கணக்கைச் சரிகட்டி அம்மாவின் மானத்தை ‎வாத்தியார் அவசர அவசரமாக அறிக்கைவிட்டு காப்பாற்றினார் என்பது ‎உண்மையாகி விடுமே! ‎
இந்த அடிப்படையில் பார்த்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் ‎வெற்றி பெற்று விட்டது.‎
இந்த நியமனத்தை டிஎன்பிஎஸ்ஸி செய்யவில்லை என்ற அடிப்படை ‎அறிவு கூட நமக்கு இல்லை என்கிறார் மெத்தப்படித்த வாத்தியார். ‎டிஎன்பிஎஸ்ஸிக்குத்தான் இதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால் சிறப்பு ‎அனுமதி பெற்றதன் அடிப்படையில்தான் இந்த அதிகாரம் மக்கள் ‎நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டது. இதை அரசாங்கம் ‎தெளிவுபடுத்தாத போது டிஎன்பிஎஸ்ஸி செய்ததாகத்தான் யாரும் ‎நினைப்பார்கள். ‎
அரசாணையின் முக்கிய பகுதியின் தமிழாக்கம்:‎
4. பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், ‎இந்த 835 பணியிடங்களையும் (723பேர் MBBS படித்தவர்கள், 112 பணிகள் ‎முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்கள்)விதி 10 (A) (1) யின்படி ‎சென்னை தொழிற் படிப்புக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‎பெற்று நிரப்புவதற்கு அரசிடம் அனுமதி கோருகிறார்.‎
5.அரசாங்க நிறுவனங்களில் உள்ள துணை ‎மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்களை வைத்திருப்பது ‎சுகாதாரத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பின்னடைவை ‎ஏற்படுத்தும், குறிப்பாக கிராமப்புறங்களில் பின்னடைவை ஏற்படுத்தும். ‎TNPSC மூலமாக மருத்துவ அதிகாரிகளை நியமிக்கும் பொதுவான ‎முறை இந்நேரத்தில் அதிகபயனளிக்காது, அது அதிக நேரம் ‎எடுக்ககூடியதாக உள்ளது.‎
6. எனவே, இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் ‎மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் கோரிக்கையை ‎அரசு ஏற்கிறது. எனவே மேற்கூறப்பட்டுள்ள 835 இடங்களையும் ‎தற்காலிகமாக நியமிக்க
10 (A) (1) விதியை பயன்படுத்தி ‎தொழிற்படிப்புகளுக்கான வேலைவாய்ப்புஅலுவலகத்தின் மூலமாக ‎நியமிக்க தற்போது உள்ள விதிகளை ஆளுநர் தளர்த்துகிறார். இந்த ‎நியமனம் கீழ்க்கண்ட விதிகளுக்குட்பட்டது.‎
‎ அ) இந்த தற்காலிக நியமனம் பணி நிரந்தரத்திற்கான எந்த ‎உரிமையும் வழங்காது
‎ ஆ) முறையாக இந்த இடங்கள் பூர்த்தி செய்யப்படும் போது ‎இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ‎நீக்கப்படுவார்கள்.‎
உங்கள் பில்டப்புக்கும், புளுகு மூட்டைக்கும் ஓர் அளவே இல்லையா?:‎
பில்டப்புகளைக் கொடுப்பதிலும், புளுகு மூட்டைகளை அவிழ்த்து ‎விடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று சொல்லும் ‎அளவிற்கு இவர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டுக் கொண்டே ‎இருப்பார்கள். அதில் ஓர் அல்வாதான், “அமைச்சர் எங்கள் ‎பாக்கெட்டுக்குள்” என்ற புரூடா.‎
இந்த பிரச்சனையை தாங்கள் கத்தார் நாட்டிலிருந்த போது தெரிய ‎வந்ததாகவும், உடனே மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ‎விஜயிடம் தொலைபேசியில்
தொடர்புக் கொண்டு கேட்ட போது, “அப்படி இருக்க வாய்ப்பில்லை” ‎என்றும், “நான் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறேன்; ‎சென்னைக்குத்தான் வந்ததும் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து ‎தகவல் சொல்கிறேன்” என்றும் கூறினாராம்.‎
கசப்பான உண்மை :‎
அமைச்சரை பாக்கெட்டில் வைத்திருப்பதாக பில்டப் கொடுக்கும் ‎இவர்கள் முக்கியமான புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ‎வராமல் கத்தார் நாட்டுக்கு சென்றது ஏன்?‎
இவர்களின் ஆதரவை அதிமுக பெற விரும்பவில்லை என்பதால்தான் ‎கத்தார்க்கு எஸ்கேப் ஆகி மானம் காத்தார்கள் என்பதுதான் கசப்பான ‎உண்மை.‎
இப்படி கத்தாரிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தொடர்பு ‎கொண்ட போது, மேற்கண்டவாறு சொல்லியிருப்பாரேயானால், ‎பிரச்சனை பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் பற்றியும் ‎தெரிந்தவுடன், மருத்துவர் தேர்வாணையத்தைக் கண்டித்து ம.ம.க. ‎சார்பாக கண்டன அறிக்கையை வெளியிட்டது ஏன்?‎
இவர்களது பொதுச்செயலாளர் அப்துல் சமது வெளியிட்ட கண்டன ‎அறிக்கையே காட்டுகின்றது இவர்கள் அமைச்சரிடம் தொலைபேசியில் ‎பேசியதாக விடும் புருடா பொய்யானது என்று. அப்படி இவர்கள் ‎அமைச்சரிடம் தொலைபேசியில் பேசியிருந்தால் முஸ்லிம்களுக்கு ‎துரோகம் இழைக்கப்பட்டதாக சொல்லி அதைக் கண்டித்து அறிக்கை ‎வெளியிட்டிருக்கமாட்டார்கள்.‎
மேலும், புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அமைச்சர் ‎திரும்பிய பிறகு எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாக சொன்னார் ‎என்றும் புருடா விட்டிருந்தார்கள். இதுவரை அமைச்சர் வெளியிட்ட ‎அரசாணையை இவர்கள் வெளியிடவில்லை. அமைச்சரும் அரசு ‎சார்பில் இது குறித்து எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.‎
பாவம்! இன்னும் அமைச்சர் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக ‎பிரச்சாரம் செய்து கொண்டுள்ளார் போலும்.‎
உலகமகா மெகா காமெடி :‎
இதில் கடைசியாக வாத்தியார் அடித்துள்ள காமெடிதான் உலகமகா ‎மெகா காமெடி. அந்த காமெடி இதோ :‎
‎“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது ‎என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து ‎கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க ‎மாட்டோம். ஆனால் ஆய்வு செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ‎ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்” என்று ‎கூறி மிகப்பெரிய காமெடி பண்ணியுள்ளது இந்த ஜனாஸா. ‎
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது ‎என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து ‎கண்காணித்து வருகின்றதாம். ‎
என்னே அருமையான கண்காணிப்பு?‎
இவர்கள் கண்காணித்த கண்காணிப்பின் லட்சணத்தைத்தான் கடந்த ‎திமுக ஆட்சியில் கண்கூடாகக் கண்டோமே!‎
திமுகவிற்கு கடந்த ஆட்சியில் அடிமைச் சேவகம் எழுதிக் ‎கொடுத்துவிட்டு, அரசு அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை ‎சரியான முறையில் வழாங்காமல் துரோகமிழைத்த போது, ரோஸ்டர் ‎முறை என்று கூறி இந்த வாத்தியார் அதை கவனமாகக் கவனித்து ‎கண்காணித்த லட்சணம்தான் அனைவருக்கும் தெரியுமே!‎
‎”சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரோகமிழைத்து விட்டார்கள்; ‎முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு விஷயத்தில் இழைக்கப்பட்ட அநீதி ‎சரிசெய்யப்படும்” என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியே ஒப்புக் ‎கொண்ட போதும், இவர்கள் அதை ஒப்புக் கொண்டபாடில்லை. ‎அப்போது அது ரோஸ்டர் முறை – பூஸ்டர் முறை என்று முட்டுக் ‎கொடுத்து சமுதாய துரோகம் செய்து, “தாங்கள்தான் நம்பர் ஒன் – ‎சமுதாய துரோகிகள்” என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினர். ‎
இப்படி சென்ற ஆட்சியில், “ஐயா”வுக்கு கூஜா தூக்கி, கண்காணித்த ‎கண்காணிப்பின் லட்சணத்தைத்தான் சென்ற ஆட்சியில் கண்டோமே! ‎இதுதான் இவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் லட்சணமாம்!!‎
இந்த கேவலப்பட்ட பிழைப்பு இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல: ‎
எனவே முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படும் ‎போது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என ஆளும் ‎கட்சிக்கு ஆதரவாக, ஜால்ரா தட்டுவதும், கூஜா தூக்குவதும், அடிமைச் ‎சேவகம் செய்வதும் வாத்தியாருக்கும், தமுமுகவிற்கும் ஒன்றும் ‎புதிதல்ல. அவர்களது பிழைப்பே அதுதான். வழக்கமாக தொன்று ‎தொட்டு இதையே ஒரு வேலையாக இவர்கள் செய்து வருவதால் இது ‎அவர்களுக்கு கைவந்த கலையாக ஆகிவிட்டது.‎
இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா கையில் வைத்திருக்கும் ‎எஞ்சியுள்ள எலும்புத்துண்டான வாரியப்பதவி எனும் எலும்புத்துண்டின் ‎மகிமைதான். ‎
வாத்தியார் சொல்வது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் ‎முஸ்லிம்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வேலையைத்தான் மானம் ‎கெட்ட வாத்தியார் செய்து வருகின்றார்.‎
தமிழக அரசாங்கம் – பணி நியமனம் சம்மந்தமாக ஒரு அறிவிப்பை ‎வெளியிடுகின்றது. அதில் முஸ்லிம்கள் இல்லை. அதிகாரிகளிடம் ‎கேட்டால் வேறு ஒரு கணக்கைக் காட்டி இட ஒதுக்கீடெல்லாம் ‎கொடுத்தாகிவிட்டது என சொல்கின்றனர். எனவே இடஒதுக்கீட்டில் ‎அநீதி இல்லை என நம்மை தமுமுக நம்பச் சொல்கின்றது. ‎
இதை அறிவுள்ள எவனும் ஏற்க மாட்டான். ஏனெனில் இந்தக் ‎காரணத்தை எல்லா பணி நியமனங்களுக்கும் சொல்லலாம். எனவே ‎எப்போதெல்லாம், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களோ, ‎அப்போதெல்லாம், “அரசு ஏற்கனவே இதற்கு முஸ்லிம்களை ‎வேலைக்குப் பணி அமர்த்தி இருக்கும், அதிகாரிகள் அந்த ‎அறிவிப்புகளை வெளியிடாமல் மறந்து இருக்கலாம், எனவே ‎முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை” என முஸ்லிம்கள் நம்ப ‎வேண்டும் என மமக சொல்கின்றது.‎
எனவே எந்தப் பணி நியமனத்திலும் நாம் இட ஒதுக்கீட்டைப் பார்க்கக் ‎கூடாது. நம்பிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு ‎வழங்கப்பட்டிருக்கும் என நாமாக நினைத்துக் கொள்ள ‎வேண்டும்.இதைத் தான் மம கட்சி சொல்கின்றது.‎
‎ ‎
இவ்வளவு விழிப்புடன் இருக்கும் போதே அரசு அதிகாரிகள் ‎முஸ்லிம்களை ஏமாற்றுகின்றார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் ‎அதிகாரிகளை நம்ப வேண்டும் என தமுமுக கருத்தை ஏற்றுக் ‎கொண்டால் அவ்வளவுதான். முஸ்லிம்களில் ஒருவருக்குக் கூட அரசு ‎வேலை கிடைக்காது. எனவே தமுமுகவின் தற்போதைய அறிக்கை ‎இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை ‎ஊக்குவிப்பதாகவே உள்ளது.‎
எனவே இந்த சமுதாய துரோகிகளை இனம் காண்போம்!!‎

http://www.tntj.net/92491.html

No comments:

Post a Comment