ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, November 11, 2011

போர்க்களத்தில் பொய் சொல்வது தப்பில்லையாம்...!!!!

அமீர் அல்தாப் SDPI யின் வேட்பாளர் அல்ல. அவர் கோவையில் சுமார் 10 அமைப்புகளின் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர். ஆனால் இங்கே சொல்வதோ வேறு..  

கோவை: மேயர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய SDPI கூட்டணி!

http://muthupetpopularfront.blogspot.com/2011/10/sdpi_24.html

கோவை மேயர் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகள் யாரும் எதிர்பாராத சிறுபான்மை கூட்டணி வேட்பாளர் அமீர் அல்தாப் 36 ,000 ஓட்டுகளை பெற்றுள்ளார். கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கூட்டணி யில் மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் என பல்வேறு கத்சியால் தனித்தனியே களமிறங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் திரு.வேலுசாமி 2 ,81 ,728 வாக்குகள் பெற்று வெற்றிபெட்டுள்ளர்.




தி.மு.க. வேட்பாளர் திரு.கார்த்திக் 1 .53 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற அனைத்து கட்சி வேல்பாலர்களும் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 36 ,000 வாக்குகள் பெற்ற ஒரே வேட்பாளர் SDPI கூட்டணியை சேர்ந்த அமீர் அல்தாப் மட்டுமே. பல்வேறு கட்சிகளை பின்னுக்கு தள்ளி SDPI கூட்டணி வாங்கிய ஓட்டுகள் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் மட்டுமில்லாமல் பரவலாக அவருக்கு மற்ற கட்சிகளுக்கு இணையாக ஓட்டுகள் பதிவாகியிருப்பதை அறிய முடிந்தது. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சராசரியாக ஒரு வாகுட்சாவடியில் 300 க்கும் மேற்பட்ட வாக்குகள் SDPI கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக கிடைத்துள்ளன. கோவையில் SDPI யுடன் பல்வேறு சிறுபான்மை அமைப்புகள் இணைந்து அமீர் அல்தாபை வேட்பாளராக நிர்ணயித்தனர்.




கோவை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தாழ்த்தப்பட்டோர், மாற்றம் பெண்களுக்கு ஒதுக்கியதில் அதிர்ப்த்தி ஏற்பட்டு 2 வார்டுகளில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் தீர்வு ஏற்படாததால் அந்த வார்டுகளில் தங்களின் அதிர்ப்தியை ஏற்படுத்த மக்கள் அனைவரும் மேயர் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போட்டுள்ளனர்.

No comments:

Post a Comment