ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, March 20, 2011

மறுபரிசீலனை செய்க வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சிவேண்டுகோள்


தேர்தல் புறக்கணிப்பு மறுபரிசீலனை செய்க வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சிவேண்டுகோள்

E-mailPrintPDF
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் புதுவை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதில் இருந்து விலகி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது .



இமாலய ஊழல்களை செய்து தமிழ் நாட்டை உலக அரங்கில் இழிவு படுத்திய ஊழல் ஆட்சியை அகற்றுவதும் இலங்கை தமிழ் இனப்படுகொலையாளர்களையும் அதனை கண்டிக்காத தமிழின விரோத சக்திகளையும்  அதிகாரத்தை விட்டு அகற்றுவதும் ,  இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அநியாயமாக சுட்டு கொன்று குவித்துவருவதை தடுக்க தவறிய தமிழர் துரோக அரசினை நிரந்தரமாக முறியடித்து வீட்டுக்கு அனுப்புவதே நமது முக்கிய குறிக்கோளாகும்  தமிழக மக்களின் எதிர்பார்ர்ப்பும் இதுவாக இருக்கும் நிலையில் மதிமுக தனது நிலையை மறுபரிசீலனைசெய்யவேண்டும்  இந்த மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்து ஜனநாயக கடமை ஆற்ற மனித நேய மக்கள் கட்சி அழைப்பு விடுக்கிறது.
 http://www.tmmk.in

No comments:

Post a Comment