தமிழகம் அறிந்த முனாஃபிக் யார்?
முதலில் அல்ஹம்துலில்லாஹ் சொல்லி கொள்ளுங்கள்.எனென்றால் இது போன்று தமிழகம் முழுதும் நடக்க வேண்டும்,ததஜ வை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது தானே இந்த உலகில் தற்போதைய உங்கள் லட்சியம்.
இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.அது எப்படியோ இருக்கட்டும் இந்த ரமலானில் எவ்வளவோ நன்மையான காரியங்கள் செய்ய வாய்ப்பு இருந்தும் உங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அடுத்த இயக்கத்தின் செய்தியை இப்படி புறம் பேசுகின்றோமே இது நமக்கு தேவையா? இதனால் நம் நல்லறங்கள் அழிந்து போகுமே என்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாமல் உங்களால் எப்படி தான் தினம் தினம் புறம் பேசி திரிய முடிகிறதோ தெரியவில்லை.அல்லாஹ் ஒருவனை வழி கெடுக்க நாடிவிட்டால் அவனுக்கு பாவம் செய்வதற்கான வாசலை திறந்து விடுவான் அப்படி தான் இன்று மிச்சம் மீதி இருக்கும் அமல்களையும் அழித்து கொண்டு மறுமையில் முப்லிஸாக நிற்க வேண்டும் என்று அல்லா உங்கள் விசயத்தில் நாடி விட்டான் போலும் அதனால் தான் மகத்துவம் பொருந்திய நன்மையை கொள்ளை அடிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் ரமலானிலும் அதிலும் இறுதி பத்திலும் கூட உங்களால் அந்த நாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படியே பேசி பேசி உங்கள் பாவ மூட்டையை சுமந்து கொள்ளுங்கள் இவ்வளவு தூரம் ஆரம்ப காலம் தொட்டு தொவ்கீதில் இருந்த இவர்களையா அல்லாஹ் தூக்கி எறிந்து விட்டான் என்று அப்போது ஆச்சரியப்பட்டோம்,.இப்பொழுது தான் தெரிகிறது இந்த அளவுக்கு மட்டமான முனாஃபிக்காக இருந்து உள்ளீர்கள் என்று.அல்லாஹ் இன்னும் உங்களின் முழுமையான குணத்தையும்,வெளிப்படுத்தி உங்களை மேலும் மேலும் புறம் பேச வைத்து ததஜ சகோதரர்களுக்கு உங்கள் நன்மைகளை பறித்து தருவானாக.
M.S.Hameed,
Koothanallur.shashariff@yahoo.com
Koothanallur.shashariff@yahoo.com
வ அலைக்கும் வஸ்ஸலாம்
பொய்யையும், பித்னாவையும் அவதூறுகளையும் நபிமார்கள், ஸஹாபாக்கள் முதல் இன்று உள்ள சமுதாய தலைவர்கள் வரை முழுக்க முழுக்க பேசி தெரியும் ஒரு மனிதர், அவர் தன் மன இச்சையின்படி ஆட்டிப்படைக்கும் ஒரு இயக்கம், தன் பெயரில் ஒரு இணையதளத்தை வைத்து அத்தனை பேர்கள் மீதும் காறி உமிழும் இழிச் செயல், கள்ளப் பெயரில் பிற அமைப்புகளை அதன் தலைவர்களை விமர்சனங்கள் செய்யுங்கள் என்று ஃபத்வா கொடுத்தவைகள் எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் கூட தவறாக தெரியவில்லை.
இச்செய்தி பொய்யாக இருந்திருந்தால், நம்மை உண்டு இல்லை என ஆக்கி இருப்பார்கள். ஊர்ஜிதம் செய்யப்பட்டு ஒரு சகோதரர் ஒருவரால் நமக்கு அனுப்பட்ட செய்தியினை நாம் எந்த விமர்சனமும் செய்யாமல் ஒரு செய்தியாகத்தான் வெளியிட்டு உள்ளோம்.
தாங்களுக்கு அது பெரிய அவதூறாக, பாவகரமான விஷயமாக சகோதரர் M.S.ஹமீது அவர்களுக்கு தெரிகிறது. ஒரு தலைப்பட்சமான, கண்மூடித்தனமான பார்வை இருந்தால் இப்படித்தான் இருக்கும் சகோதரரே!
ததஜவை நாங்கள் அழிக்க நாடவும், இல்லை, அது எங்களுக்கு அவசியமும் இல்லை. ததஜ என்ற அமைப்பின் மீது எங்களுக்கு எந்த வித கோபமும் இல்லை. அது கலைந்தாலும், கலையாவிட்டாலும் எவ்வித நட்டமும் இல்லை. நல்லறங்களை ததஜ மூலமாகத்தான் செய்தே ஆக வேண்டும் என்று சட்டம் ஒன்றும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கவுமில்லை, ததஜ அழிக்கிறதே என கவலை கொள்வதற்கு....
நல்லறங்களை அல்லாஹ் சொன்ன பிரகாரம் செய்தால், அதற்கான கூலியினை நிச்சயம் அவன் வழங்குவான்.
புறம் பேசுவது யார் என்பது தமிழ் பேசும் அத்தனை முஸ்லிம்களுக்கும் தெரியும்? விடுதலைப்புலிகளுடன் ஜாக் அமைப்பினை இணைத்து பேசுவது, தமுமுக தலைவர்களை, இதஜ தலைவரை சேர்த்து பேசுவது? டாக்டர் அப்துல்லாஹ் குறித்து பேசுவது? ஷம்ஸுதீன் காஸிமியை வம்புக்கு இழுப்பது? ஜமாஅத்தே இஸ்லாமியை விமர்சிப்பது? ஜாகிர் நாயக்கை விமர்சிப்பது யார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்? நாங்கள் கண்ணியத்திற்குரிய எந்த நபிமார்களையும் குறைகூறி பேசவில்லை? கண்ணியத்திற்குரிய எந்த ஸஹாபிகளை கேவலமாக விமர்சிக்கவில்லை? சமுதாயத் தலைவர்களை யாரையும் கண்ணியக்குறைவாக விமர்சிக்கவும் இல்லை.
எவ்வித எழுத்தும், எந்த பேச்சும் இல்லாமல் வந்த செய்தியினை அப்படியே வெளியிட்ட எங்களது நாவை கட்டுப்படுத்த சொல்லி எங்களுக்கு அறிவுரை கூறும் சகோதரர் M.S.ஹமீது அவர்களே!
சென்ற ரமதானில் தமிழக முஸ்லிம்கள் வெட்கி தலை குனிந்த திருவாரூர் இரட்டை படுகொலைக்கு உங்கள் அண்ணன் பிஜெயின் நாவு பேசியதே! அதை கண்டு தமிழக முஸ்லிம்கள் அத்தனைபேரும் அதிர்ச்சியுற்றார்களே!. நரம்பில்லாத நாவு எப்படியும் பேசும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக இருக்கிறாரே! இவர் ஆலிம்தானா? அல்லது ஒரு குண்டர் படை தலைவனா? என எண்ணம் அளவிற்கு பேசினாரா? அப்போது தாங்கள் அவருக்கு இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும், இரண்டு தொடைக்களுக்கு மத்தியில் உள்ளதை யார் பாதுகாக்கிறாரோ அவருக்கு நாளைய நிலையில் சுவனம் இருக்கிறது என பேசிய தாங்கள், மோசமான விளக்கம் அளிப்பது அபத்தமானது என அறிவுரை வழங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பள்ளிகளிலிருந்து அமல் செய்ய வேண்டிய முஸ்லிம்கள் வெட்டிக் கொண்டு, செத்து மாய வேண்டிய நிலைகளை உருவாக்கி, ஜெயிலுக்கும், கோர்ட்டுக்கும் அலைய வேண்டிய அவல நிலையை உருவாக்கியது யார் என ஒன்றுக்கு பல முறை இறையச்ச உணர்வுடன் சிந்தித்து பாருங்கள்.
இறையச்ச உணர்வு இல்லாமல் தனக்கு சரியென தெரிவதை சரி என்றும், தனக்கு தவறு என நினைப்பதை தவறு என்றும் தான் தோன்றிதனமாக சிந்திக்கும் இவரிடமிருந்து அல்லாஹ் எங்களை வெளியேற்றியதை மிக்க மகிழ்ச்சியான விஷயமாக கருதுகிறோம். அல்ஹம்துலில்லாஹ். முனாஃபிக்களுக்கான அத்தனை அடையாளங்களுடன் வலம் வருபவர் யார் என்பதை எல்லா மக்களும் நன்கு அறிவார்கள். எங்களை போல் நீங்களும் அறிந்து வெளிவரும் காலத்தை அல்லாஹ் தருவான்.
நாங்கள் அவதூறு கூறி இருந்தால், அல்லாஹ் எங்கள் அமல்களை வீணாக்கட்டும் அல்லாது போனால் உங்களை அல்லாஹ் மன்னிக்கட்டும்.
நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.
வஸ்ஸலாம்
முகவை.
முஷ்தாக்